districts

img

மலை ரயில் போக்குவரத்து சேவை பாதிப்பு

மேட்டுப்பாளையம், நவ.5- கனமழை காரணமாக இருப்புப்பாதை யில் ஏற்பட்ட மண்சரிவால், மேட்டுப்பாளை யம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. உலக பாரம்பரிய சின்னமான நூற் றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கு தின சரி இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டு மின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை யும் பெரிதும் கவரும் இம்மலை ரயில், மழை  காலங்களில் இதன் பாதையில் ஏற்படும் மண்  சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக் கடி தடைபட்டு நிற்கிறது. இந்நிலையில், வெள்ளியன்று இரவு மலை ரயில் கடந்து செல்லும் மலைப்பாதையில் பெய்த கன மழை காரணமாக கல்லார் ரயில் நிலையம்  முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங் களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாள பாதை புதைந்து போனதோடு மரங்களும் சாய்ந்தன. இதனால், சனியன்று காலை வழக் கம் போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலை யத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு சுற் றுலா பயணிகளுடன் புறப்பட வேண்டிய மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படு வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சீர மைப்பு பணிக்காக 20க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, இருப்புப் பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணிகள் நடை பெற்று வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரி வித்துள்ளது.