districts

img

பசுந்தேயிலை வரத்து சரிவு எதிரொலி ஆலைகளில் தேயிலை உற்பத்தி பாதிப்பு

உதகை, ஜன.16- பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்ததால் கூட்டுறவு, தனியார் தொழிற்சாலைகளில் தேயிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா பகு தியில் தேயிலை விவசாயம் முக் கிய தொழிலாக உள்ளது. இத னால் மஞ்சூர், கைகாட்டி, கிண் ணக்கொரை, எடக்காடு, பிக்கட்டி,  இத்தலார், மகாலிங்கா, மேற்கு நாடு, நஞ்சநாடு உள்ளிட்ட 9  கூட்டுறவு ஆலைகளும், ஏராள மான தனியார் தொழிற்சாலைக ளும் இயங்கி வருகிறது. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விவசாயிகள் இந்த தொழிற் சாலைகளில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது தேயிலை தோட்டங்களில் இருந்து பறிக்கும் பச்சை தேயிலையை மேற்படி தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர்.  இந்நிலையில், குந்தா பகுதி யில் கடந்த நவம்பர் மாதம் துவங் கிய பனி, தற்போது வரை  நீடித்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் உறைபனி கொட்டு கிறது. இதனால் தேயிலை தோட் டங்களில் செடிகள் கருகி மகசூல்  கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. இதன் காரணமாக குந்தா  பகுதியில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்து போயுள்ளது. கடந்த காலங்களில் தினசரி 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் கிலோ வரை  பசுந்தேயிலை வரத்து காணப் பட்ட நிலையில், தற்போது வறட்சி யின் காரணமாக நாளொன்றுக்கு வெறும் 4 ஆயிரம் முதல் 6 ஆயி ரம் கிலோ வரை மட்டுமே பசுந் தேயிலை வரத்து உள்ளது.  இதனால் தினசரி உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலை யில், பெரும்பாலான தொழிற் சாலைகளிலும் வாரத்திற்கு 3  நாட்கள் என்ற முறையில் தேயி லைத்துாள் உற்பத்தி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதிலும் பெரும்பாலான தனியார் தொழிற் சாலைகளில் பசுந்தேயிலை வரத்து அடியோடு பாதிக்கப்பட் டுள்ளது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் கூட தேயிலைத்துாள் உற் பத்தி மேற்கொள்ள முடியாத நிலையில், உற்பத்தி செலவினங் கள் அதிகரிப்பதால் பெரும் சிர மம் ஏற்படுவதாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் வேதனை தெரி விக்கின்றனர்.