districts

img

பிஎஸ்என்எல்: அவுட்சோர்சிங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 17- பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவையை உடனே வழங்கவும், அவுட்சோர்சிங் திட் டத்தை மறு பரிசீலனை செய்யவும் வலியு றுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் அறைகூவல்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவையை உடனே வழங்கவும், அவுட்சோர்சிங் திட் டத்தை மறு பரிசீலனை செய்யவும்,  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதி யம், இஎஸ்ஐ, பி.எப், கிராஜூவிட்டி போன்ற  அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களை யும் அமுல்படுத்தும் விதத்தில் டெண்டர் களை வெளியிடவும் வலியுறுத்தி வெள்ளி யன்று பிஎஸ்என்எல் தொலைபேசி அலுவல கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செந்தில் தலைமை ஏற்றார். தொலைதொடர்பு பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலை வர் பா.சௌந்தரபாண்டியன், ஒப்பந்த ஊழி யர் சங்கத்தின் மாநில நிர்வாகி ரமேஷ் சிறப் புரை ஆற்றினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க  கிளைச் செயலாளர்  குமாரவேல் உள்பட திர ளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக அருண் தேவசகாயம் நன்றி கூறினார்.