districts

img

குழாய் உடைப்பில் வீணான குடிநீர் புகாரைத் தொடர்ந்து உடனடி சீரமைப்பு

திருப்பூர், மே 27- திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் குடிநீர் வீணாவ தைத் தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளித்த வுடன் மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாகச் செயல் பட்டு அதை சரி செய்தனர்.  திருப்பூர் மாநகராட்சி 11 ஆவது வார்டு அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் குடிநீர் விநி யோகக் குழாய் உடைந்து மூன்றாவது திட்டக் குடிநீர் சுமார் 15 நாட்களாக வீணாக சாக்கடையில் கலந்தது. இரும்பு மின்  கம்பத்தின் அடியில் இருந்து குடிநீர் கொப்பளித்து வந்தது. மண் அரிப்பின் காரணமாக கம்பம் சாய்ந்து விரும்பத் தகாத நிகழ்வுகள் நடக்கும் முன்பாக இதைச் சரி செய்ய  வேண் டும் என, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அலுவ லர்களுக்கு வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இணையத்தில் புகாரளிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை முதல் மின்  வாரிய ஊழியர்களின் ஒத்துழைப்போடு, குடிநீர் வடிகால்  வாரிய ஊழியர்கள் அந்த இடத்தில் சரி செய்யும் பணியில்  ஈடுபட்டனர். உடனடியாகச் செயல்பட்டு, குடிநீர் குழாய்க் கசிவை சரி செய்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழி யர்களுக்கும், அதிகாரிகளுக்கும், ஒத்துழைத்த மின்வாரி யத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.