ஐஎம்ஏ டெக்ஸ் சிட்டி மருத்துவ சங்கம் தொடக்கம்
திருப்பூர், ஜன. 8 - திருப்பூரில் ஐஎம்ஏ டெக்ஸ் சிட்டி என்ற பெயரில் புதிய மருத்துவர்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய தலைமையின் அங்கீகாரத்துடன் டெக்ஸ் சிட்டி மருத்துவ சங்கம் 2023ஆம் ஆண்டு முதல் செயல் பட துவங்குகின்றது என்று இதன் தலைவர் அன்சாரி தெரிவித் துள்ளார். மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து சேவை செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சங்கத்தின் செயலாளராக மருத்துவர் கார்த்திகேயன், பொரு ளாளராக மருத்துவர் சுந்தரமூர்த்தி, ஆலோசகர்களாக மருத்துவர் முபாரக், மருத்துவர் ராஜ்குமார் நல்லதம்பி ஆகி யோர் செயல்படுவர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முதல் மலைவாழ் இன பெண் வழக்கறிஞருக்கு வனத்துறை பாராட்டு
கோவை, ஜன.8- மேட்டுப்பாளையம் அருகே கோபனாரி மலை கிராமத் தில் நடைப்பெற்ற பொங்கல் விழாவில், மலைவாழ் மக்களின் முதல் பெண் வழக்கறிஞராக தேர்வாகியுள்ள காளியம்மா ளுக்கு பரிசு வழங்கி வனத்துறையினர் பாராட்டு தெரி வித்தனர். கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள கோப னாரி மலை கிராமத்தில் ரோட்டரி மற்றும் அரிமா சங்கம் சார் பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மலை கிராம மக்க ளுக்காக நடத்தபட்ட இந்நிகழ்ச்சியில், அப்பகுதி பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சி யில் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் ராமசுப்பரமணி யம் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, மலைவாழ் மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி னர். இதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் மலைவாழ் மக்க ளின் ஒருவராக இருந்து, அந்த சமூகத்தில் தமிழகத்தின் முதல் பெண் வழக்கறிஞராக தேர்வாகியுள்ள காளியம்மாள் என்பவ ருக்கு ரோட்டரி மற்றும் அரிமா சங்கம் சார்பில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அப்போது, தனது வாழ்க்கையில் தான் ஒரு சாதனை பெண் ணாக அங்கீகாரம் பெற தன்னை பெற்று எடுத்து பின் தங்கிய சமூகத்தில் இருந்தாலும் தமிழகத்தில் தன்னை அடையாளப் படுத்த தாயே காரணம் என காளியம்மாள் கூறினார். மேலும், காளியம்மாளுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரி வித்தனர்.
கோவை மாரத்தான் போட்டி ஆட்சியர், ஆணையர் பங்கேற்பு
கோவை, ஜன.8- கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாரத் தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநக ராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாநகர காவல் ஆணை யர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்பு களின் பங்களிப்புடன் கோவை விழா நடைபெற்று வருகிறது. கடந்த ஜன.4 ஆம் தேதியன்று துவங்கிய கோவை விழா ஞாயிறன்றுடன் நிறைவுபெற்றது. கோவை விழாவில் இது வரை பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற் றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக நேரு விளையாட்டு அரங்கம் அருகில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஐந்து வயது குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர். இந்த மாரத்தான் போட்டி 2.5 கிமீ, 5 கிமீ, 10 கி.மீ என நடைபெற்றது. இதில், பத்து கிலோ மீட்டர் பிரிவில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரேசன் கடைக்குள் புகுந்த காட்டுயானைகள்
கோவை, ஜன.8- ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட் பட்ட சின்கோன பகுதியில் உள்ள ரேசன் கடைக்குள் புகுந்த காட்டுயானைகள், அங்கி ருந்த அரிசி மூட்டைகளை சேதப்படுத்தியது. கோவை மாவட்டம், ஆனைமலை புலி கள் காப்பகம், மானாம்பள்ளி வனச்சரகத்திற் குட்பட்ட லாசன் கோட்டம், சின்கோன பகுதி யில் 5 காட்டுயானைகள் கொண்ட கூட்டம், அப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையை உடைத்து, அதிலிருந்த அரிசி மூட்டைகளை சேதப்படுத்தியது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். மேலும், வால் பாறை பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி குழுவாக முகா மிட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண் டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அர்த்தமில்லாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார்
பொன்குமார் பேட்டி
உதகை, ஜன.8- தமிழ்நாடு என்று அழைக்கக்கூடாது என அர்த்தமில்லாமல் பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விவசா யிகள், தொழிலாளர் கட்சியின் தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விவசாயிகள், தொழி லாளர் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத் தின் தலைவருமான பொன்குமார் செய் தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப் பட்டு வருகிறது. இவற்றை தொழிலா ளர்கள் பயன்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டு காலமாக வாரியங்கள் செயல் படாமல் இருந்தன. கட்டுமான தொழிலா ளர் நலவாரியத்தில் 33 லட்சம் தொழி லாளர்கள் பதிவு செய்திருந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் உறுப்பி னர்கள் 13 லட்சமாக குறைந்தது. இந்த 1.5 ஆண்டுகளில் புதிதாக மீண்டும் 7.5 தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முதல் வர் மற்றும் அரசு மீது தொழிலாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
திமுக அரசு அமைந்த பிறகு வாரி யங்களில் வழங்கப்படும் உதவிகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதுவரை 5 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.480 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உத விகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண் டில் 1.51 லட்சம் தொழிலாளர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களின் ஓய்வூதி யம் ரூ.2000 ஆக உயர்த்த அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வரு கின்றோம், என்றார். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ் நாடு என்று அழைக்கக்கூடாது என பேசி வருகிறார். திராவிடம் நீண்ட வரலாறு கொண்டுள்ளது. சமூக நீதியை நிலை நாட்டியுள்ளது. இன்றைக்கு தமிழ்நாடு சமூகநீதி, கல்வி, மருத்துவத்தில் முதன் மையாக உள்ளது. தமிழ்நாடு என்று அழைக்கக்கூடாது என கூறும் ஆளு நரை வன்மையாக கண்டிக்கிறோம். மத் திய பிரதேசம், உத்திரபிரதேசம், இமாச் சல பிரதேசம், கர்நாடகம், ஆந்திர பிரதே சம் சென்று மாநிலங்களின் பெயரை மாற்ற சொல்ல ஆளுநருக்கு தைரியம் இருக்கிறதா?. அர்த்தமில்லாமல் ஆளு நர் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை சீண்டி பார்க்கிறார். அவர் அரசியல் செய்ய விரும்பினால் ஆளுநர் பதிவியிலிருந்து விலகி பேச வேண்டும். நேற்று வரை சமஸ்கிருதம், மனு தர்மம் பற்றி பேசி வந்தார். அடிப்படை அறிவு இல்லாமல் ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னர் பாரத தேசம் தோன்றி யது என்கிறார். 56 ராஜ்ஜியங்களை ஒன் றிணைந்து தான் பாரதம் என்ற தேசம் உருவானது. ஆளுநரின் செயலை கண் டித்து தமிழகம் முழுவதும் விவசாயி கள், தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளளோம், என் றார்.
பட்டுக்கூடுகள் ஏலம்
தருமபுரி, ஜன.8- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவ சாயிகள் பட்டுக்கூடுகளை விற் பனைக்கு கொண்டு வருகின் றனர். இந்த அங்காடிக்கு சனி யன்று 1.360 டன் பட்டுக்கூடு களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், அதிகபட்ச மாக ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.721க்கும், குறைந்தபட்ச மாக ரூ.516க்கும், சராசரி யாக ரூ.657க்கும் விற்பனை யானது. மொத்தம் ரூ.8 லட் சத்து 94 ஆயிரத்து 204க்கு விற்பனை செய்யப்பட்டது.