districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சட்டவிரோதமாக சாயகழிவுநீர் திறப்பு: மக்கள் அவதி

ஈரோடு, ஜூலை 10- ஈரோடு, கொங்கம்பாளையத்தில் நள்ளிர வில் சட்டவிரோதமாக சாயக்கழிவுநீர் திறந்து விடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள் ளாகினர். ஈரோடு மாவட்டம், கொங்கம்பாளையத் தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான சாய, சலவை பட்ட றைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கி ருந்து இரவு நேரங்களில் சாயக்கழிவுநீர் சட்ட விரோதமாக வெளியேற்றப்படுவதாக பொது மக்கள் தொடா்ந்து புகார் அளித்து வருகின்ற னர். இந்நிலையில், ஞாயிறன்று நள்ளிரவில் சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் திடீ ரென திறந்து விடப்பட்டது. அங்கு திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சாயக்கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறு கையில், எங்களது பகுதியில் சுமார் 30 சாய, சலவை பட்டறைகள் செயல்பட்டு வருகின் றன. அங்கிருந்து இரவு நேரத்தில் சட்ட விரோ தமாக சாயக்கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. அது ஒரு ஓடையின் வழியாக சென்று காலிங் கராயன் வாய்க்காலில் கலக்கிறது. இது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டே  இருக்கிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித் தால், ஓரிரு பட்டறைகள் மீது மட்டுமே பெயர ளவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் நிரந்தர தீர்வு காணப்படுவதில்லை. கழிவு நீரால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதி அடைந்தோம், என்றனர்.

திருப்பூரில் பனியன் நூல் கொடுக்காமல் மோசடி செய்தவருக்கு இரு ஆண்டு சிறை

திருப்பூர், ஜூலை 10- திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம், ரூ.20 லட்சத்தை பெற்று கொண்டு,  நூல் கொடுக்காமல் மோசடி செய்து, தலைமறைவாக இருந்த குற்றவாளிக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. திருப்பூர், அப்பாச்சி நகரை சேர்ந்த பனியன் நிறுவன உரி மையாளர் உத்தம்குமார். இவர் பாலச்சந்தர் என்பவரிடம் நூல்  வாங்குவதற்கு ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால்  பாலச் சந்தர் நூல் கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இது குறித்து, திருப்பூர் மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து பாலச்சந்திரனை கைது செய்தனர். மேலும், இது தொடர் பான வழக்கு விசாரணை திருப்பூர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாலச்சந் தர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். எனவே, நீதிமன்றம் பாலச்சந்தர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்தது. இத னையடுத்து, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், பாலச் சந்தரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பாலச் சந்தருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, பாலச்சந்தரை போலீ சார் சிறையில் அடைத்தனர்.

இந்தியா சிமெண்ட்-ன் தொழிலாளர் விரோத போக்கு: லாரி உரிமையாளர்கள் மனு

நாமக்கல், ஜூலை 10- இந்தியா சிமென்ட் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை களைந்து, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் லாரி உரி மையாளர்கள் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமாரிடம் சங்ககிரி மேற்கு  பகுதியைச் சேர்ந்த லாரி உரிமை யாளர்கள் மனு அளித்தனர். அதில், பள்ளிபாளையம், படை வீடு பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறு வனத்திற்காக 40 ஆண்டுகளாக சிமெண்ட் லோடு ஏற்றி வருகி றோம். கடந்த சில காலங்களாக எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிமெண்ட் லோடு மற்றும் வாடகை உள்ளிட்ட பிற சலுகை கள் தற்போது வழங்கப்படுவதில்லை. இதனால் லாரி உரிமை யாளர்கள் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வரு கின்றனர். எனவே, கடந்த காலங்களைப்போல, இந்தியா சிமெண்ட் நிர்வாகம் சிமெண்ட் லோடு பணிகளை வழங்க  வேண்டும். இந்த தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சுமூக தீர்வை ஏற் படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு தின ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 10 – அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்க ளாக பதவி உயர்வு வழங்க வேண்டும், ஐந்தாண்டு பணி  முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங் கத்தினர் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடத்தினர். திங்களன்று திருப்பூர் நகர குழந்தைகள் வளர்ச்சித் திட்ட  அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஆ.வனிதாமணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் த.சித்ரா, மாவட்டத்துணைத் தலைவர் சா.ரஹமத்துன்னிசா, ஒன்றியச் செயலாளர் மு.ஜூலி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி னர்.  அங்கன்வாடி ஊழியர்கள் அதிகளவில் சுகாதாரப் பணி கள் செய்வதால் அவர்களுக்கு கிராமப்புற செவிலியர் பதவி  உயர்வு வழங்கப்பட்டு வந்தது. தற்போது நிறுத்தி வைக்கப் பட்ட பதவி உயர்வை மீண்டும் வழங்க வேண்டும், அங்கன் வாடி மையங்களை ஊழியர்கள் இல்லை என ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளான  அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்ட னர். ஒன்றியப் பொருளாளர் கலைவாணி நன்றி கூறினார்.

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:22.43/60அடி நீர்வரத்து:கனஅடி
வெளியேற்றம்:28கனஅடி

அமராவதி அணை நீர்மட்டம்: 47.48/90அடி.நீர்வரத்து:927கனஅடி
வெளியேற்றம்:1300கனஅடி

அரசு போக்குவரத்து அறிவுறுத்தல்

திருப்பூர், ஜூலை 10 - கோவை காந்திபுரம், சிங் காநல்லூா் பேருந்து நிலை யங்களில் இருந்து கரூா்,  திருச்சி, நாகப்பட்டினத் துக்கு இயக்கப்படும் அரசுப்  பேருந்துகள்  வழித்தடத்தில்  உள்ள சூலூர், பல்லடம்,  அவிநாசிபாளையம், காங் கேயம், வெள்ளகோவில்,  தென்னிலை, பரமத்தி உள் ளிட்ட ஊர்களுக்குச் செல் லும் பயணிகளை ஏற்றி  இறக்கிச் செல்ல வேண்டும்  என கோவை மண்டல அரசுப்  போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் அறிவு றுத்தி உள்ளார்.

குறுகலான சாலையில் விபத்து: முதியவர் உயிரிழப்பு

அவிநாசி, ஜூலை 10 – அவிநாசி அருகே வடுகபாளையம் பிச்சாண்டம்பாளை யத்தைச் சேர்ந்தவர் கணேசன் (60). இவரது மனைவி பாலா மணி (58). இவர்கள் இருவரும் கூட்டப்பள்ளியில் இருந்து வடு கபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண் டிருந்தனர். புஞ்சை தாமரைக்குளம்  அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி ஓட்டுநர், எதிரே வந்த அரசு பேருந் துக்கு வழி விடுதற்காக, திடீரென லாரியை சாலையோரம்  இயக்கியுள்ளார். அப்போது லாரி இருசக்கர வாகனத்தின் மீது  மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து  சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை குறுகலாக  இருந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டது. எதிர்காலத்தில் இங்கு விபத்துகள் நேராமல் இருக்க சாலையை அகலப்ப டுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள் ளனர்.

வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப்பணி

உதகை, ஜூலை 10- ஓவேலியில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டு மான பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் முடிவு செய்யப்படாத நிலம், செக்சன்-17 சட்டத்துக் குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வகை நிலங்களில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ள னர். இதேபோல் ஓவேலி பேரூராட்சி பகுதியி லும் கட்டுமானம் மேற்கொள்ள தடை அம லில் உள்ளது. இதனால் சாலை, வீடுகள் சீர மைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரி வித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கட்டட  சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரி கள் தற்காலிகமாக விதிவிலக்கு அளித்துள்ள னர். இந்நிலையில், ஓவேலி காந்திநகரில் உள்ள அம்மன் கோவில் பகுதியில் புதிய கட் டடங்கள் கட்டும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதையறிந்த வனத்துறையி னர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டடங்கள் கட்ட்டக்கூடாது என பணியை தடுத்து நிறுத் தினர்.

சந்தன மரம் வெட்டி கடத்தல்

கோவை, ஜூலை 10- கோவை, சிட்கோ எல்ஐசி காலனி 3 ஆவது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீ சுப்பிரமணியம் (50). ஐடி நிறுவன ஊழியர். இவரது வீட்டு பின்புறம் சந் தனமரம் ஒன்று வளர்ந்து வந்தது. இந்நிலையில், சனி யன்று இரவு அங்கு வந்த அடையாளம் நபர்கள் சுமார்  10 அடி உயரமுள்ள சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென் றுள்ளார். மறுநாள் காலை யில் எழுந்து பார்த்தபோது  சந்தன மரம் கடத்தப்பட்டிருப் பதை கண்டு ஸ்ரீ சுப்பிரமணி யம், சுந்தராபுரம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று மின்தடை

தருமபுரி, ஜூலை 10- தருமபுரி மாவட்டம், மாம் பட்டி துணை மின் நிலை யத்தில் செவ்வாயன்று (இன்று) மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மாம் பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திரா புரம், கொங்கவேம்பு, கீழ் மொரப்பூர், பறையப்பட்டி புதூர், கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, கணபதிப் பட்டி, செக்காம்பட்டி, கீரைப் பட்டி, செல்லம்பட்டி, கீழா னூர், வேப்பம்பட்டி, தீர்த்த மலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை, நரிப்பள்ளி, சிக்களுர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப் பட்டி, சிட்லிங், வேலனூர், ஈட் டியாம்பட்டி, வேப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ் வாயன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப் படுகிறது.

நாமக்கல்

நாமக்கல், நல்லூர் துணை மின் நிலையத்தில் செவ்வா யன்று (இன்று) பராமரிப்பு பணிகள் நடைபெற உள் ளது. இதன் காரணமாக செவ் வாயன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளை யம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், கொண் டரசம்பாளையம், பெருங் குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளி பாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் பட்டுள்ளது.