தருமபுரி, பிப்.28- கல்வராயன் மலைத்தொடரில் சட்டவிரோதமாக செம்மண் கடத்த லில் ஈடுபடுபவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அருகே உள்ள கல்வராயன் மலைத்தொடரில் மஞ்சவாடி முதல் அரூர் அருகே உள்ள பட்டவர்த்தி வரை உள்ள மலையடிவார பகுதிக ளில், குறிப்பாக ஏ.பள்ளிப்பட்டி வரு வாய் கிராமம், இருளப்பட்டி வரு வாய் கிராமத்திற்குட்பட்ட சாலூர், கல் லாத்துக்காடு, கோட்டை மேடு, பட்டுக் கோணம்பட்டி போன்ற பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலங்கள் நூற்றுக் கணக்கான ஏக்கர் உள்ளது. இப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிலர் சட்டவிரோதமாக 5 முதல் 15 அடி ஆழத்திற்கு செம் மண்ணை ஜேசிபி இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து டிராக்டர்கள், லாரிக ளில் எடுத்து சென்று செங்கல் சூளை களுக்கு விற்பனை செய்து வருகின்ற னர். இதுகுறித்து பொதுமக்கள் கூறு கையில், கல்வராயன் மலையடிவார பகுதிகளில் செங்கல் சூளைகளுக்கு செம்மண் அரசு அனுமதி இல்லா மல் எடுத்துச் சென்று பயன்படுத்தி வரு கின்றனர்.
இதுகுறித்து அரசு நிர்வா கத்திற்கு பலமுறை தெரிவித்து நடவ டிக்கை இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். இந்த குற்றச் சாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அவர்கள் நேரில் ஆய்வு செய்ய அப்பகுதிக்கு சென்றார். இருளப்பட்டி ஏ.பள்ளிப் பட்டி வருவாய் கிராமத்தில் உள்ள சாலூர் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் ஆய்வு மேற்கொண் டார். வருவாய் துறையினர் வருவதை கண்ட மண் திருடும் கும்பல், டிராக் டர், ஜேசிபி இயந்திரங்களை அங்கி ருந்து அப்புறப்படுத்தி விட்டனர். இதனையடுத்து, அங்குள்ள செங் கல் சூளையில் கூலி வேலை செய்ப வர்களிடம் அதிகாரிகள் விசாரித்த னர். அப்போது அவர், சட்டவிரோத மாக மண் கடத்தி எடுத்து வரப்பட்டு செங்கல் சூளைகளில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. வருவாய்த்துறைக்கு தெரியாமல் இவ்வாறு செயல்பட்டு வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப் படும். எனவே, உரிய ஆவணங்கள் இருப்பவர்களும், இந்த தொழிலில் ஈடுபடுபவர்களும் அரசின் கவனத் திற்கு தாங்களாகவே வந்து தகவல் தெரிவிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்தனர்.