districts

img

இருக்கு ஆனா இல்லை... அட்டுமண்ணு கிராமத்தின் அவலம்

உதகை, ஜன.25- சாக்கடை, உண்டு கால்வாய் இல்லை. குடிநீர் உண்டு, குடிநீர் பிடிக்கும் இடம் இல்லை. வழிகள் உண்டு, நடைபாதை இல்லை. சாலை உண்டு, பேருந்து இல்லை. விளக்குகள் உண்டு எரிவது இல்லை. நீர் தேக்க தொட்டி உண்டு நீர் இல்லை. புகார் கள் உண்டு, தீர்வுகள் இல்லை. சுதந்திரம் பெற்ற ஆண்டு முதல் ஒரு  கிராமம் இருக்கு;  ஆனால் இல்லை என்கிற நிலையில், எவ்வித  அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அட்டு மண்ணு கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், மேல் குந்தா பஞ்சாயத்திற்கு உட்பட்ட வார்டு களில் ஒன்றுதான் அட்டுமண்ணு கிராமம். இந்த ஊரில் மொத்தம் முப்பத்தைந்து  வீடு கள் இருக்கின்றன. மொத்த மக்கள் தொகை  149 பேர். ஒரு அரை நூற்றாண்டு காலமாக தங் கள் ஊருக்கு எந்த உள்கட்டமைப்பு வசதி களையும் செய்துதரவில்லை என்று தொடர் புகார்களை அளித்த வண்ணம் இருக்கி றார்கள் இந்த கிராமத்து மக்கள்.

பஞ்சாயத்து அலுவலகம் துவங்கி வட் டாச்சியர், ஆட்சியர் அலுவலகம் என  நீல கிரி மாவட்டத்தின் அனைத்து அதிகாரிகளி டமும் மனுக்களை அளித்து தீர்வு இல்லாமல் தவித்து வருகின்றனர். நாற்பது வருடங்க ளாக திறந்த நிலையில் உள்ள சாக் கடை கால்வாய்  மழைக்காலங்களில் மிகப் பெரிய நோய்  தொற்றை உருவாக்கி  பலரை  துன்பத்துக்குள்ளாகி உள்ளது. கழிவுநீர்  சாக்கடையை செப்பனிட்டு மூடி அமைத்து தர வேண்டும் என்று பலமுறை விண்ணப் பங்கள் அளித்தும் தீர்வு ஏற்படவில்லை. ஊர் காரரின் நிலத்தை அரசுக்கு தான மாக கொடுத்த இடத்தில் கட்டப்பட்ட சமுதா யக் கூடத்தில்தான் சுப நிகழ்வுகளும், இரங் கல் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இவர் களுக்காக இருக்கும் இந்த ஒரே ஒரு  பொது கட்டிடம் விரிசல் விழுந்து சுவரில் நீர் இறங்கி மிக மோசமான நிலையில் ஆபத்தாக காட்சி யளிக்கிறது. இதன் கீழ்ப்பகுதியில் போடப் பட்ட தடுப்புச்சுவர் ( ரெவிட்மேன்ட்) நீர் இறங் கியதில் விரிசல் ஏற்பட்டு அஸ்திவாரத்திற்கு சேதத்தை ஏற்படுத்தி தற்போது விழும் நிலை யில் உள்ளது.

மேலும் நடைபாதை, தரைத்தளம் சிதைந்து முட்களும் புதர்களும் மண்டி கிராம  மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளது.எனவே, சிமெண்ட் நடைபாதை அமைத்து தர வேண்டும். முதன்மை சாலையை இணைக் கும் கிராமத்தின் கிளைச்சாலை குறுக லாக உள்ளதால் அவசர மருத்துவ ஊர்தி முதலான வாகனங்கள் வருவதற்கு  இடையூறாக  இருக்கிறது.  கிராமத்தில் குழாயடியில் தண்ணீர் பிடிக் கும் கட்டிடம் நாற்பது வருடம் பழையது. தரை யெல்லாம் பெயர்ந்து குண்டும், குழியுமாக நீர் தேங்கிக்கிடக்கும் இந்த இடம் டெங்கு கொசுக் களை உற்பத்தி செய்யும் மையமாக  இக் கிராமம் உள்ளது. இந்த குக்கிராமத்தை சுற்றி போடப் பட்ட மின்கம்பங்களில் விளக்குகள் பொறுத் தப்படாமல் வருடக்கணக்கில் கிடைப்பதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பால்  மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில்,  எல்லா கதவுகளையும் தட்டி எந்த பயனும்  பெறாத இந்த கிராமத்து மக்கள் ஏமாற்றத் தின் விளிம்பில் கடந்த நாற்பது ஆண்டு களாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். விடியல் அரசு விடியலை தர வேண்டும் என்கிற  எதிர்பார்ப்போடு அட்டு மண்ணு கிராம மக்கள்  காத்திருக்கிறார்கள்.