அவிநாசி, ஆக.30- அவிநாசி அருகே உமையஞ்செட்டிபா ளையம் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைவில் முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வராவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றி யம், மங்கலம் சாலை பிரிவிலிருந்து, அம்மா பாளையம் வரை குடிதண்ணீர் குழாய் பதிப்ப தற்காக ஒரு வருடம் முன்பு சாலையில் பள் ளம் தோண்டி பைப்புகள் பதிக்கும் வேலை நடைபெற்று முடிந்துள்ளது. இச்சாலையா னது அவிநாசி - மங்கலம் சாலை பிரிவில் இருந்து முக்கால் கிலோமீட்டரும், பூண்டி நகராட்சி இணைப்பு சாலையாகவும் உள்ளது. இந்நிலையில் தார்ச்சாலையில் பள்ளம் தோண்டியுள்ளதால் சாலைகள் சிதல மடைந்து, போக்குவரத்திற்கு மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்க ளில் அடிக்கடி விபத்துகளும் நேர்கிறது. இதனை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலரிடம், 2022 வருடம் முதல் மனுக்கள் கொடுத்து வந்தனர். இதையடுத்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத தால், உமையஞ்செட்டிபாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலையில் வாழை மரம் நடும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனை அறிந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது. விரைவில் பணிகள் தொடங்கும் எனக் கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதைதொ டர்ந்து கற்களையும் மண்ணையும் போட்டு பணிகளை துவங்கினர். ஆனால் 10 மாதங்கள் கடந்த நிலையிலும் பணிகள் முடியவில்லை. இதே நிலை நீடிக்கும் ஆனால், அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அவிநாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து மங்கலம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவ தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உமையஞ்செட்டிபாளையம் கிளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.