அவிநாசி, அக்.18 – 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்த லில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது தமிழகத் துக்கு உரிய அனைத்து நிதியும் கிடைக்கும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., கூறினார். திமுகவின் துணைப் பொதுச் செயலாள ராக தேர்வு செய்யப்பட்ட ஆ.ராசா எம்.பி., செவ்வாயன்று அவிநாசிக்கு வருகை தந்த போது, திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித் தனர். புதிய பேருந்து நிலையத்தில், திமுக மற் றும் கூட்டணி கட்சியினர் வரவேற்பை ஏற்றுக் கொண்டு ஆ.ராசா பேசுகையில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் எப்பொழுதும் என்னை கைவிட்டதில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக உதகை, மேட்டுப்பாளையம், அவிநாசி உள்ளிட்ட இடங்களில் அலுவல கங்களை திறந்தேன். இந்த அலுவலகங்கள் மக்களுக்கு நன்கு பயன்படுகின்றன. மேலும் பொதுமக்கள் கொடுக்கின்ற மனுக்களை எல் லாம் நான் எங்கிருந்தாலும், தீர்க்கின்ற வேலையை செய்கிறேன். ஒரு மாதத்தில் சத் தியமங்கலத்தில் அலுவலகம் திறக்க உள் ளேன்.
முதல்வரை சந்தித்து நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மலைவாழ் பகுதி மாணவ, மாணவி கள் படிக்க தாளவாடியில் கலைக் கல்லூரி வேண்டுமென கோரிக்கை வைத்தேன். அடுத்த மாதத்தில் கலைக் கல்லூரி தொடங் கப்பட்டு 600 மாணவர்கள் படித்து வருகின் றனர். தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற் கும்போது 5 லட்சம் கோடி கடன் இருந்தது, இத னால் பல்வேறு திட்டங்கள் செய்ய முடிய வில்லை. 2024 ஆட்சி மாற்றப்பட்டால் தமிழ கத்திற்கு வரவேண்டிய அனைத்து தொகை களும் கிடைக்கும். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டி லேயே முன்னோடி தொகுதியாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதியை மாற்றுவேன் என் றார். இந்த நிகழ்வில் திருப்பூர் மேயர் தினேஷ் குமார், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றிய பொறுப்பாளர் பழனிச்சாமி, சிவப்பிரகாஷ், திருமுருகன்பூண்டி நகர மன்ற உறுப்பினர் பாரதி, தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி சந்தோஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஈஸ்வ ரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பழனிச்சாமி, திருமுருகன் பூண்டி நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணி யம், காங்கிரஸ் கட்சி சார்பில் சாய் கண்ணன் உட்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.