திருப்பூர், ஆக 11- திருப்பூர் வடக்கு ஒன்றியப் பகு திகளில் உள்ள பள்ளி மாணவர்க ளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக் காவிட்டால் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி பெருமாநல்லூர், வாவிபா ளையம், வெங்கமேடு ஆகிய பகு திகளில் அரசு பேருந்து சிறைப்பி டிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் அறிவித்துள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் திருப்பூர் அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டலப் பொது மேலாளருக்கு வெள்ளியன்று அனுப்பியிருக்கும் கடித்தில் கூறி யிருப்பதாவது, திருப்பூர் கலை ஞர் பேருந்து நிலையத்தில் இருந்து பூலுவபட்டி, நெருப்பெ ரிச்சல் வழியாக வாவிபாளையம் அரசு குடியிருப்பு வரை வழித்தடம் எண் 55 பேருந்து சென்று வருகி றது. சமத்துவபுரம், வாவிபாளை யம், சேடர்பாளையம், குருவாயூ ரப்பன் நகர், நெருப்பெரிச்சல், தோட்டத்துப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கணக்கம்பாளையம், பெருமா நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக ளுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் தினமும் தனியார் வாக னம் மூலமும், இருசக்கர வாக னத்திலும், கால்நடையாகவும் பள் ளிக்கு சென்று வருகின்றனர். இத னால் மாணவ, மாணவிகளின் பய ணப் பாதுகாப்பு குறைகிறது. மேலும் உடல் உபாதைகளுக்கும், மிகுந்த மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். எனவே வாவிபா ளையம், கணக்கம்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய அரசு பள்ளிகளையும்,
குமரன் காலனி திருக்குமரன் அடுக்குமாடி குடியி ருப்பு, மீனாட்சி நகர், பெருமாநல் லூர் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் விதத்தில் கூடுதல் பேருந்து வசதிகள் செய்து தர வேண்டும். அதேபோல் திருப்பூர் கலை ஞர் பேருந்து நிலையத்தில் இருந்து குமார்நகர், அங்கேரிபா ளையம், செட்டிபாளையம் வரை எண் 6, 6ஏ, 6பி ஆகிய பேருந்துகள் ஏற்கனவே வந்து சென்றன. தற்போது இப்பகுதிகளுக்கு இரண்டு பேருந்துகள் மட் டுமே வந்து செல்கின்றன. இத னால் வெங்கமேடு அரசு மேல் நிலைப்பள்ளி, கொங்கு மெட்ரிக் பள்ளி, ஏவிபி மெட்ரிக் பள்ளி மாண வர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே இப்பகு திக்கு ஏற்கனவே வந்து சென்ற அனைத்து பேருந்துகளையும் இயக்கிட வேண்டும். திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் இருந்து பெருமாநல்லூர் வழி யாக குன்னத்தூர், நம்பியூர், மலையப்பாளையம், ஆதியூர், செங்கப்பள்ளி ஆகிய வழித்தடங் களில் சென்று வந்த பேருந்துகள் பெருமாநல்லூர் வரை மட்டுமே சென்று திரும்புகின்றன. எனவே மேற்படி அனைத்து பகுதிகளுக் கும் ஏற்கனவே சென்று வந்த பேருந்துகளை முழுமையாக இயக்கிட வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 22ஆம் தேதி காலை 8 மணிக்கு வெங்கமேடு, வாவிபாளையம், பெருமாநல்லூர் ஆகிய பகுதிக ளில் அரசுப் பேருந்துகளை சிறைப் பிடித்துப் போராட்டம் நடத்தப்ப டும் என்று ஆர்.காளியப்பன் தெரி வித்துள்ளார்.