districts

img

மக்களுடன் உயிர்ப்புள்ள தொடர்பின் அடையாளம் தியாகி கே.ரத்தினசாமி

மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராக தோழர்  கே.ரத்தினசாமி வாழ்ந்தார் என்பதற்கு அவரது உயிர்த் தியாகம் சாட்சியாக உள்ளது. அவர் இடு வாய் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டு, ஏகோபித்த  மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக திகழ்ந்தார். 1996ஆம் ஆண்டு முதல் முறை வெற்றி பெற்று, ஊராட்சி தலைவர் என்ற குறைந்த அதி காரம் கொண்ட பதவியை சிறப்பாகப் பயன்ப டுத்தி அடித்தட்டு, சாமானிய ஏழை, எளிய மக்க ளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். உள்ளூரில் பாரம்பரிய அதிகாரம்  படைத்த பிற்போக்கு சக்திகளை எதிர்கொண்டு ஊர் பொது பணியை திறம் பட நிறைவேற்றினார். எனவே அடுத்த இரண்டே  ஆண்டுகளில் 1998ஆம் ஆண்டு அவரை படு கொலை செய்ய சாதி ஆதிக்கவெறியர்கள் முயற்சி செய்தனர். அதில் அவர் மரணம் வரை  சென்று உயிர் மீண்டார்.

எனினும் தனது உயிரைக் குறிவைத்த பிற கும் அவர் கொண்ட கொள்கையில் செய்த பணி யில் பின்வாங்கவில்லை. எனவே மக்கள் சக்தி  அவருக்கு பேராதரவாக வளர்ந்தது. எனவே இடுவாய் ஊராட்சியில் ரத்தினசாமி  என்ற கம்யூனிஸ்ட் ஊழியரை அவ்வளவு எளி தாக வீழ்த்திவிட முடியாது என்று எதிரிகள்  புரிந்து கொண்டனர். எனவேதான் 2001ஆம்  ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மக்களோடு மக்களாக ஒன்று கலந்திருந்த கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிராக அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றாக கை கோர்த்தன. மக்க ளுக்கு எதிரான சக்திகள் அனைத்தும் ஒன்று  சேர்ந்து “மக்கள் முன்னணி” என பெயர் வைத்து களம் கண்டன. ஆனால் உண்மையான மக்களின் முன் னணி படையாக, தோழர் கே.ரத்தினசாமியின் தலைமையில் இடுவாய் கிராமத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போலி மக்கள் முன்ன ணியை வீழ்த்தியது. இரண்டாவது முறையாக ஊராட்சி மன்றத்  தலைவராக கே.ரத்தினசாமி பொறுப்பேற்றார். தங்கள் அதிகாரம் நிரந்தர மாக கையை விட்டு போய்விட்டது,

மக்க ளோடு மக்களாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி யையும், அதன் ஊராட்சி மன்றத்  தலைவர் கே. ரத்தினசாமியையும் இனிமேல் வீழ்த்த முடி யாது என்று பிற்போக்கு அதிகார சக்திகள் உணர்ந்தன. அதன் வெளிப்பாடுதான் அடுத்த  ஆறே மாதங்களில் அதாவது 2002ஆம் ஆண்டு  மார்ச் 13ஆம் தேதி அவரை அவர்கள் கொடூர மான முறையில் படுகொலை செய்தனர். அந்த கொலைக்கு அவர்களே வாக்குமூல மும் கொடுத்திருக்கின்றனர். “ஆக்கிரமிப்பை  அகற்ற செய்த அராஜகம், தாழ்த்தப்பட்டவர் களுக்கு ஆதரவாக இருந்தது, அன்று சாகாமல் தப்பியது, கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாக இருந்தது, (ஆதிக்க) கவுண்டர்களை மதிக்கா தது, இந்துவுக்கு எதிராக இருந்தது, மீண்டும்  வெற்றி பெற்றது, கம்யூனிஸ்ட்டாக  இருப்பது”  என எட்டு காரணங்களை ரத்த கறை படிந்த காகி தத்தில் பட்டியல் போட்டு அவரது சடலத்துக்கு அருகே விட்டுச் சென்றனர். மேலே இருக்கும் அந்த வாசகங்களை மீண் டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். ஊழல் செய்தார், கமிஷன் கேட்டார், காண்ட்ராக்ட்டில் பங்கு கேட்டார், சதி செய்து பதவிக்கு வந் தார், மக்களின் முதுகில் குத்தினார் என்றா  சொல்லி இருக்கிறார்கள்?

எதிரிகள் குற்றச் சாட்டுகளாக முன்வைத்திருக்கும் காரணங் கள் அனைத்தும் உண்மையான கம்யூனிஸ்டு களின் அடிப்படை நற்பண்புகள் ஆகும். எனவே தான் அவரை மக்கள் அன்று நேசித்தனர், இன் றும் நேசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு தினத்துக்கு இடுவாய் கிராமத்துக்குச் செல்லும் போது, அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தும்போது, அங்கிருக்கும் நலிந்த, ஏழை, எளிய மக்கள் கண்ணீர் மல்க, “சாமி!” என்று சொல்லி மலர்களைத் தூவி நினைவேந் தல் செய்யும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிக ளைக் காண முடியும்.  தியாகி ரத்தினசாமியின் உயிர்த் தியாகத் துக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2020 ஆம் ஆண்டு இடுவாய் ஊராட்சியில் மார்க் சிஸ்ட் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. அந்த  ஆண்டு இதே நாளில் அவரது நினைவிடத் தில் அந்த கிராமத்து ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள், “இந்த வெற்றியைக் காக்க வேண்டும்  சாமி!” என கேட்டு நினைவேந்தல் செய்தனர்.

அந்த மக்கள் தியாகி ரத்தினசாமியை மட்டு மல்ல, அவர் உயர்த்திப் பிடித்து வாழ்ந்து காட் டிய கொள்கைகளை, அதை முன்னெடுத்து செல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை யும் உணர்வுப்பூர்வமாக நேசிப்பதை இந்த சம் பவம் எடுத்துக் காட்டியது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு கொண்ட கம்யூனிஸ்ட் ஊழியர்களை, கம்யூ னிஸ்ட் கட்சியை யாராலும் வெல்ல முடியாது என்பதற்கு உயிர்ப்பான சாட்சியாக தியாகி கே. கே.ரத்தினசாமி திகழ்கிறார்.  மக்களோடு உயிர்ப்பான தொடர்பு கொண்ட மகத்தான இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்துணர்வுடன் உயர்ந்து எழும்! இடது ஜனநாயக சக்திகளை அணிதி ரட்டி இந்தியாவை பாசிச சக்திகளிடம் இருந்து  மீட்கும்! இந்த ஆண்டு தியாகி கே.ரத்தினசாமி யின் நினைவு தினம் இந்த செய்தியைத்தான் உணர்த்தி நிற்கிறது.  - வே.தூயவன்