districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கணவர் தற்கொலை மனைவி விளக்கம்

சூலூர், ஜன.21- சூலூர் தென்னம்பாளை யத்தில், வீடியோ மற்றும் ஆடியோக்கள் வெளியிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மனைவியிடம் போலீசார் 6  மணி நேரத்துக்கு மேலாக  விசாரணை மேற்கொண் டனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள தென் னம்பாளையம் பகுதி சேர்ந்த  சிவா என்கின்ற ரத்னா சீலன்  கடந்த வருடம் செப்டம்பர் 21 ஆம் தேதி வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை வெளி யீட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். தற் கொலை வீடியோ மற்றும் ஆடியோக்கள் வைரலான நிலையில், தற்கொலைக்கு அவர் திருமணம் செய்த விஜிபழனிச்சாமி என்ற பெண் தான் காரணம் என்று  சிவாவின் பெற்றோர் கோவை எஸ்.பி அலுவல கத்தில் புகார் தெரிவித் திருந்தனர்.  இதையடுத்து கோவை  மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் சூலூர் போலீசார் விசாரணையை முன்னெ டுத்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரத்தின சீலனின் மனைவி விஜி பழனிச்சாமி நேரில் ஆஜராக போலீசார் சமன் அனுப்பினர்.  இதையடுத்து நேரில்  ஆஜரான விஜி பழனிச் சாமியிடம் சூலூர் சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.  இதனிடையில் தற்கொலை செய்து கொண்ட  ரத்தினசீலனின் தாய் மற்றும் தங்கையை நேரில் அழைத்த சூலூர் போலீசார் இருதரப்பு விளக் கத்தையும் பதிவு செய் தனர். 

பாரதிபுரம் பள்ளிக்கு 125 இருக்கைகள் நன்கொடை

திருப்பூர், ஜன. 21 -  திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உள்ள பாரதிபு ரம் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு கரைப்புதூரில்  உள்ள விக்டஸ் டையிங்  நிறுவனம் சார்பாக இருக்கைகள்  வழங்கும் விழா நடைபெற்றது. வெள்ளியன்று பாரதிபுரம் நடுநிலைப் பள்ளியில் இடுவாய்  ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் விக்டஸ் டையிங் உரிமையாளர் கவிதா  தினேஷ்குமார் கலந்து கொண்டு பள்ளிக் குழந்தைகள்  அமர்ந்து கல்வி கற்க சுமார் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள  125 இருக்கைகளை பள்ளிக்கு ஒப்படைத்தார். மேலும் இது  குறித்து மன நிறைவை தெரிவித்த அவர் இன்னும் தன்னால்  இயன்ற உதவிகளை பள்ளிக்குச் செய்ய தயாராக இருப்பதா கவும் கூறினார்.கடந்த ஓரிரு ஆண்டுகளாக அரசு பள்ளியில்  அதிக மாணவர்கள் சேர்வதால் அனைத்து மாணவர்களுக் கும் தரமான அனைத்து வசதிகளையும் கொண்ட  கல்வி  சேவை  வழங்க தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் என  ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன் கேட்டுக் கொண் டார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.பரமசிவம், பள்ளி  தலைமையாசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியம், விக்டஸ்  டையிங் ஊழியர்கள் சரவணன் வேலு, உமா சங்கர், ஊராட்சி  மன்ற வார்டு உறுப்பினர்கள் பி.ஈஸ்வரி, மணி, எம்.கணேசன்,  ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும், மாணவ, மாணவிகளும் திரளாக பங்கேற்றனர். பள்ளி துணை  தலைமை ஆசிரியர் நன்றி கூறினார். நிகழ்வின் முடிவில் பள்ளி  வளாகத்தில் விக்டஸ் டையிங் உரிமையாளர் கவிதா தினேஷ் குமார் பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டார்.

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து நடத்துநர் படுகாயம்

தாராபுரம், ஜன.21- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஹோட்டல் ராஜா என்ற  தனியார் பேருந்தின் நடத்துநர் பேருந்தின் முன் படிக்கட்டில்  இருந்து தவறி கீழே விழுந்ததில் படு காயங்களுடன் தாராபு ரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு - பழனி செல்லும் ஹோட்டல் ராஜா என்ற தனியார்  பேருந்தில் நடத்துநர் ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் மற்றும் பேருந்து ஓட்டுநராக மனோகரன் என்பவரும் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில் சனியன்று ஈரோட்டில் இருந்து தாராபு ரம் பேருந்து நிலையத்திற்கு வந்த தனியார் பேருந்து பயணி களை ஏற்றிக்கொண்டு பெரிய கடைவீதி வழியாக புது காவல்  நிலைய வீதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது நடத்து நர் யுவராஜ் முன் படிக்கட்டில் நின்று கொண்டு வந்து கொண்டி ருந்தார். அப்போது திடீரென பேருந்து முன்பக்க கதவு திறந்து  கொண்டது. இதனால்  முன் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த  யுவராஜ் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். நடத்து னர் விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் சத்தமிட் டனர் இதனைக் கேட்டு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பலத்த சத்தத்துடன் சாலையில் உருண்டோடிய நடத்துநரை  தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின், மேல் சிகிச்சைக்காக  திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்துள்ளனர்.

ரூ.49,76,569 பருத்தி ஏலம்

தாராபுரம், ஜன.21-  திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்  கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மறைமுக பருத்தி விற் பனை ஏலத்தில் ரூ.49,76,569  ஏலம் நடைபெற்றது.  இதில் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு, கோவை   மாவட்டங்களை சேர்ந்த  விவசாயிகள்  188 நபர்கள் பருத்தி  கொண்டு வந்திருந்தனர். அதிகபட்ச விலையாக குவிண்டால்  ஒன்றிற்கு ரூ. 8.716 க்கும், குறைந்தபட்சவிலை ரூ. 7.200 க்கும்,  சராசரி விலை ரூ.8000 க்கும் விற்பனையானது.  மொத்தம் ரூ. 49,76,569 ஏலம் நடைபெற்றது.

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:45.78/60அடி நீர்வரத்து:803கன அடிவெளியேற்றம்:636கனஅடி

அமராவதி அணை நீர்மட்டம்:79.66/90அடி.நீர்வரத்து:67கனஅடி வெளியேற்றம்:506கனஅடி

பொள்ளாச்சி சாலையில் இருசக்கர வாகனம் திருட்டு

தாராபுரம், ஜன.21- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில்  வசித்து வருபவர் கார்த்திகேயன். இவரது தாயார் கண்ணம் மாள் இவர் ஆர் கே எஸ் டிவிஎஸ் ஷோரூம் இல் சமையல்  பணியாளராக தங்கி சமையல் செய்து வருகிறார். இந்த  நிலையில் கண்ணம்மாள் மகன் கார்த்திகேயன் வெள்ளி யன்று மதியம் ஒரு மணி அளவில் மதிய உணவு சாப்பிடுவத;w காக தனது இரு சக்கர வாகனத்தை ஆர்.கே.எஸ். டிவிஎஸ்  ஷோரூம் முன்பு  நிறுத்தியுள்ளார். மூன்று மணி நேரத்திற்கு  பிறகு வந்து பார்க்கும்போது தனது இரு சக்கரவாகனத்தை  காணவில்லை.இதைதொடர்ந்து ஷோரூமில் பொருத்த;g பட்டுள்ள சிசி டிவி பதிவுகளை பார்வையிட்டப்போது  ஒருவர் வண்டியை எடுத்த சென்றது தெரியவந்தது. இது  குறித்து தாராபுரம் குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிநீர் திட்ட விநியோக முறைகேடுகள் விழிப்பு  பணி அலுவலரிடம் முறையீடு

குடிநீர் திட்ட விநியோக முறைகேடுகள் விழிப்பு  பணி அலுவலரிடம் முறையீடு திருப்பூர், ஜன. 21 - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்ப டும் குடிநீரில் நடக்கும் லஞ்ச ஊழல் முறைகேடு குறித்து, மண் டல விழிப்பு பணி அலுவலர் விஜயகுமாரிடம் தெரிவிக்கப்பட் டதாக ஊழல் ஒழிப்பு சட்டப் பாதுகாப்புக் குழுவினர் கூறியுள்ள னர். திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களை  உள்ளடக்கிய மண்டல விழிப்பு பணி அலுவலகத்தில் ஊழல்  ஒழிப்பு சட்டப் பாதுகாப்புக் குழுவின் சார்பில் இரா.சதீஷ்கு மார் உள்ளிட்டோர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, குடி நீர் திட்டம், விநியோகத்தில் உள்ள பிரச்சனைகள், குடிநீர்  குழாய்கள் பழுது நீக்குவதில் நடக்கும் முறைகேடுகள் பற்றி யும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து உரிய நடவடிக் கை எடுத்து பல்வேறு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பதா கவும், விசாரணை செய்வதாகவும், அனைத்து விசாரணை அறிக்கை ஆவணங்களை மேல்நிலை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாகவும் மண் டல விழிப்புப் பணி அலுவலர் விஜயகுமார் கூறியதாகவும் சதீஷ்குமார் தெரிவித்தார்.

சாமியாரிடம் ஆசி பெற்றால் தேர்வில் வெற்றியா? எஸ்எப்ஐ கண்டனம்

திருப்பூர், ஜன.21- சாமியாரிடம் ஆசி பெற்றால் போதும் தேர்வில் தேர்ச்சி  பெறலாம் என நோட்டீஸ் அச்சடித்து, அரசியல் சாசனத்திற்கு  எதிராக மாணவர்களை பூஜையில் பங்கெடுக்க வைத்த தனி யார் பள்ளி நிர்வாகங்கள் மீது கல்வி உரிமைச் சட்டப்படி நடவ டிக்கை எடுக்குமாறு இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. இது தொடர்பாக இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர்  சா.பிரவீன் குமார், மாவட்ட செயலாளர் தௌ.சம்சீர் அகமது  வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை: உடுமலையில் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை பள்ளி வாகனங்களில் கோவிலுக்கு அழைத்துச் சென்று யாகபூஜையில் பங்கெடுக்க வைத்து, ஜீயர் அருளாசி வழங்கினால் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்  என்று தவறான வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர். பள்ளி கல்வி  துறையின் அனுமதியோடு இப்படியான சம்பவங்கள் நடை பெறுகிறதா? அரசியல் சாசனத்திற்கு எதிராக மதம் சார்ந்த  நிகழ்வில் மாணவர்களை பங்கெடுக்க வைத்த தனியார் பள்ளி  நிர்வாகங்கள், அதற்கு துணை போன அதிகாரிகள் மீது  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மாணவர்  சங்கத்தின் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

நொய்டாவில் எலெக்ட்ராமா கண்காட்சி

கோவை, ஜன.21- நொய்டாவில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி  முதல் 22தேதி வரை  மின்சாரம் தொடர்பான எலெக்ட்ராமா கண்காட்சி நடைபெற உள்ள தாக இந்திய எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட் ரானிக்ஸ் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரி வித்துள்ளனர். கோவை பந்தய சாலையில் பகுதியில்  உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக மின் சாரத் துறையின் மூத்த அதிகாரிகளுடன், இந்திய எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட் ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி யாளர் சங்கத்தின் தலைவர் ரோகித் பதக்  கூறுகையில் மின்சாரம் தொடர்பான தீர்வு கள், மின்சாரப் பொருட்கள், உபகரணங்கள்,  தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்திய எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்டில் வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை என  ஐந்து நாட்கள் எலெக்ராமா 2023 கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் கனடா, பிரான்ஸ்,  ஜெர்மனி, ருமேனியா, தைவான், இங்கிலாந்து  உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த  நிறுவ னங்கள், பொறியாளர்கள் மற்றும் 5 லட்சம்   பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளது. இந்த  கண்காட்சி மூலம் 600 கோடி ரூபாய் மதிப் புள்ள வர்த்தக விவரங்களை அறிந்து கொள்ள இலக்கு உள்ளது. மேலும் தூய்மை யான மின்சார பயன்பாட்டை கொண்டு வரு வதன் மூலம் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையை மேம்படும், ஸ்டார்ட் அப் நிறுவனங் களுக்கான சவால் விருதுகள் அறிமுகம் செய்துள்ளது. தொழில் நகரமான கோவை யிலிருந்து கண்காட்சி குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்துவதாகவும், இந்த கண் காட்சியில் ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கலந்து கொள்வதாக தெரிவித் தனர். இந்த சந்திப்பின்போது அச்சங்கத்தின் தென் மண்டல தலைவர் பிரகாஷ், எலெக் ராமா 2023 கண்காட்சியின் தலைவர் ஜிதேந் திர அகர்வால் ஆகியோர் உடனிருந்தனர்.

 


 

 

 

\