புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்களை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து எருமப்பட்டி பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிபிஎம் தலைவர்கள் எஸ்.கே.சிவச்சந்திரன், இ.எம்.ராஜேந்திரன், மு.து.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.