திருப்பூர், செப். 1- நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலா ளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும் அதில் அவர்கள் வீடு கட்டிக்கொள்ள கடன் உதவியும் வழங்க வேண்டும் என்று ஊத்துக் குளி வட்ட பொதுத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சிஐடியு ஊத்துக்குளி வட்ட பொதுத் தொழிலாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம் வியாழக்கிழமை அன்று ஊத்துக்குளி சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவர் கே.பெரி யசாமி தலைமையில் நடைபெற்றது. சிஐடியு திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெ. கந்தசாமி துவக்கி வைத்து உரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் வி.கே. பழனிச்சாமி வேலை அறிக்கையும், சங்கத்தின் பொரு ளாளர் ஆர்.மணியன் வரவு செலவு அறிக்கை யும் முன் வைத்தார்கள். உறுப்பினர்கள் விவா தத்திற்கு பின்பு வேலை அறிக்கையும், வரவு செலவு அறிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட் டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் வாழ்த்துரை வழங்கி னார். சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக, தலை வர்: கே.பெரியசாமி, செயலாளர்: வி.கே.பழனிச்சாமி, பொருளாளர்: ஆர்.மணியன், துணைத் தலைவர்: ஆர்.சேகர், துணை செய லாளர்: கே.ஏ.சக்திவேல், கமிட்டி உறுப்பினர் களாக நான்கு பேரும், கமிட்டி அழைப்பா ளராக நான்கு பேரும் ஏகமனதாக தேர்வு செய் யப்பட்டனர்.
இக்கூட்டத்தில், 2018 முதல் தொழிலாளர் நல வாரியத்தில் விண்ணப்பித்து நிலுவை யில் உள்ள பணப்பலன்கள் மீதான விண்ணப் பத்தின் மீது விரைவான நடவடிக்கை எடுத்து பண பலன்களை வழங்க வேண்டும். நலவாரி யத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு வீடு கட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவும், வீடு கட்டுவதற்கு மானியத்துடன் கடன் உத வியும் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்க வங்கியின் மூலம் கடன் உதவி வழங்க வேண்டும். ஊத் துக்குளி அரசு மருத்துவமனைக்கு பேருந்து வசதியும், 24 மணி நேரம் செயல்படும் அவ சர சிகிச்சை பிரிவும், சித்த மருத்துவ பிரிவும் தொடங்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு உண வுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். வெளிநாட்டிற்கு பஞ்சு நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். பனியன் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்துறை, அவநாசி தாலுக் காவாக இருந்தபோது, ஊத்துக்குளி வட் டத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை வருவாய் துறை கிராம ஆவணங்களில் தாக்கல் செய்து பதிவு வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி வட் டக்குழு செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி உட்பட திரளான தொழிலாளர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். சிஐடியு திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் நிறை வுரை ஆற்றினார். கே.ஏ.சக்திவேல் நன்றி தெரிவித்தார்.