districts

img

காட்டு யானையால் வீடு சேதம்

உதகை, அக்.4- பந்தலூர், கொளப்பள்ளி பகுதியில் பழங் குடியினத்தைச் சேர்ந்த சங்கரன் என்பவரின்  வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. இடிந்த வீட்டை கட்டி தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டம், பந்தலூர் மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்கால மாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வனப்பகுதி யில் இருந்து வெளியேறும் காட்டு யானை கள் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு களை சேதப்படுத்துவதோடு மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பந்தலூர் அருகே கொளப் பள்ளி பகுதியில் வசித்து வரும் பழங்குடி யினத்தைச் சேர்ந்த சங்கரன் என்பவரது வீட்டை நள்ளிரவு காட்டு யானைகள் முகா மிட்டு, உடைத்து சேதப்படுத்தியது. இதனையறிந்த சங்கரன் மற்றும் அவரது குழந்தைகளுடன் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும், காட்டு யானை கள் வீட்டில் உள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு வகைகளை சூறையாடியும், வீட்டில்  உள்ள பொருட்களை உடைத்து சேதப் படுத்தி சென்றது.  இதனிடையே காட்டு யானை வீட்டை  முற்றிலுமாக உடைத்து சேதப்படுத்தியதால் அரசு வீடு கட்ட தர நடவடிக்கை எடுக்க  வேண்டும் என சங்கரன் மற்றும் பழங்குடியின  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.