districts

அரசு உத்தரவிட்ட கூலியை வழங்காத ஒப்பந்ததாரர்: மருத்துவமனை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், மார்ச் 8- திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்களுக்கு அரசு உத்தர விட்ட கூலியை வழங்காமல், தினக் கூலி யாக ரூ.350 ஐ வழங்கும் ஒப்பந்ததா ரரை கண்டித்து மருத்துவமனை வளா கத்தில் பணியாளர்கள் காத்திருக்கும் போராட்டம் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கூறியதாவது, பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு தினசரி  ஊதியமாக ரூ.725 வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு நிர்ணயித்த கூலியை விட மிகக்  குறைவாக ரூபாய் 350 மட்டுமே வழங்கப் படுகிறது. மேலும் மாதத்திற்கு ஒரு  நாள் விடுப்பு மற்றும் அரசு விடுமுறை களில் விடுப்பு எடுத்தால் தினக்கூலி யில் இருந்து பிடித்துக் கொள்கிறார்கள்.  ஏற்கனவே சொற்பத் தொகையே கூலி யாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரசு விடுமுறை நாட்களிலும் எங்களது  கூலியை பிடித்துக் கொண்டால் என்ன  செய்வது. மாதத்திற்கு 30 நாளும் வேலை  செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்ற னர். அரசு உத்தரவிட்ட கூலி ரூ.750  வழங்க கோரி கடந்த மாதம் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த ஒப்பந்ததாரர்  வரும் மார்ச் 7 ஆம் தேதிக்குள் அரசு  நிர்ணயித்த கூலி உயர்வு வழங்கப்படும்  என உறுதி அளித்தார். இதையடுத்து நாங்கள் போராட்டத்தை கைவிட்டோம்.  இந்நிலையில் இன்று மார்ச் 8 ஆம் தேதி  தேதி ஆகிய நிலையில், அது குறித்து  எதுவும் பேசாமலும் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றா மலும் உள்ள ஒப்பந்ததாரரை கண்டித்து  தான் இந்த காத்திருப்பு போராட்டம். அரசு உத்தரவிட்ட தினக் கூலி ரூ.725 வழங்க நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.