திருப்பூர், பிப்.7- ஹாலோ பிளாக் உற்பத்தியா ளர்கள் இன்று முதல் 7 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ஜல்லி, பவுடர் மற்றும் மூலப்பொ ருட்களின் அதிரடி விலை ஏற்றத்தி னால் ஹாலோ பிளாக் தொழில் மிக வும் பாதிப்படைந்துள்ளது. ஜல்லி யின் விலை ஒரு யூனிட்டுக்கு ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. ஹாலோ பிளாக் விலை நிர்ணயம் பற்றியும் கல் குவாரிகளில் ஜல்லி, பவுடர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் அரசின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் புதன்கி ழமை முதல் ஒரு வார காலம் 7 நாட்க ளுக்கு அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அதன்படி இன்று திருப்பூர் மாவட்டத்தில் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் தங்களது அடையாள வேலை நிறுத்த போராட் டத்தை தொடங்கினர். இதனால் இன்று முதல் 7 நாட்களுக்கு ஹாலோ பிளாக் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறாது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென உற் பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள் ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தி யாளர்கள் உள்ளனர். மேலும் 15 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர். இது குறித்து சிந்து ஹாலோ பிளாக் உரி மையாளர் என்.எஸ். சர்புதீன் கூறிய தாவது, ஜல்லி, எம்.சாண்ட், பி. சாண்ட் உட்பட அனைத்து பொருட்க ளுக்கும் கிரசர் உரிமையாளர்கள் ஆயிரம் ரூபாய் விலை உயர்த்தியுள் ளனர். இதனால் நாங்கள் ஒரு ஹாலோ பிளாக்க்கு 5 முதல் 6 வரை விலை ஏற்றி விற்பனை செய்ய வேண்டிய சூழ லுக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஏற்க னவே வீடு கட்ட சதுர அடி கணக்கில் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கும். நாங்கள் விலை ஏற்றினால் கட்டுமா னம் கட்டுபவர்கள் போட்டுள்ள ஒப் பந்த தொகைக்கு அவர்களால் கட்டு மானங்கள் கட்ட முடியாது. இதனால் வீடு உள்ளிட்ட கட்டுமானங்கள் பாதி யிலேயே நின்று விடும். ஏற்கனவே மூன்று மாதத்திற்கு முன்பு மின் கட் டணம் ரூபாய் 6500 வந்த நிலை யில், இப்போது பத்தாயிரம் ரூபாய் வரை வருகிறது. இதுவே ஒரு நெருக் கடியான சூழலை எங்களுக்கு ஏற்ப டுத்தியுள்ளது. இந்நிலையில் ஜல்லி எம்.சாண்ட் பி.சாண்ட் உள்ளிட்ட வற்றின் விலை ஏற்றம் எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப் பாக வாடகை கட்டிடத்தில் தொழில் செய்பவர்கள் இதனால் மேலும் பாதிக்கப்படுபவர்கள். இதே நிலை நீடித்தால் கட்டுமான தொழிலே முடங் கிவிடும். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள். எனவே பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமுகமான முடிவு எடுக்க வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் வியாபா ரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டவர் களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்ப டும் என்றார்.