districts

img

சிஐடியு அமைப்பு தினம்: காங்கேயத்தில் கொடியேற்றம்

திருப்பூர், ஜூன் 1 - இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அமைப்பு தினத்தை தொடர்ந்து செவ்வாயன்று காலை அரசுப்  பேருந்து பணிமனை முன்பு சிஐடியு காங்கேயம் கிளை சார் பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கொடியை சிஐடியு நிர்வாகிகளில் ஒருவரான பழனிச் சாமி ஏற்றி வைத்தார். மத்திய சங்க நிர்வாகி வின்சென்ட் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகாக்குழு  உறுப்பினர் தங்கவேல், மத்திய சங்க நிர்வாகி நடராஜ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர்  காளிராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக சுரேஷ் நன்றி  கூறினார்.

;