districts

img

பாஜகவை எடப்பாடி இப்பவும் விமர்சிக்காதது ஏன்?

கோவை, நவ.15- பாஜகவை விட்டு அதிமுக வெளி யேறிவிட்டது என திரும்பத்திரும்ப சொன்னாலும், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜ கவின் மக்கள் விரோத செயல்பாட்டை இப்பவும் விமர்சிக்காமல் இருப்பதன் நோக்கம் என்ன என எம்எம்கே தலை வர் எச்.எம்.ஜவஹிருல்லா கேள்வி எழுப்பினார். கோவை, குனியமுத்தூரில், தனி யார் விடுதியில் தமிழ்நாடு முஸ் லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் நிர்வா கக்குழு கூட்டம் அதன் தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான எச்.எம்.ஜவா ஹிருல்லா தலைமையில் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து, ஜவா ஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி டிச.6 ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழ கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது. வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி சிதைக் கக்கூடிய முயற்சிகளில் ஈடுபட்டு வரு கிறது. 2024ல் நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கி யமான, நாட்டின் திசை வெளியை நிர்ணயிக்கக்கூடிய ஒரு தேர்தலாக அமையவிருக்கின்றது. ‘இந்தியா’ கூட்டணி பாட்ணா, பெங்களூர், மும்பையில் ஒன்று கூடி பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. ‘

இந்தியா’ கூட்டணியை மேலும் வலுப்படுத்த காங் கிரஸ் கட்சி முழுமையான முயற்சி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணி வலுவாக உள்ளது.  தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் ‘இந்தியா’ கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறி விட்டாலும் கூட, இன் றைக்கும் அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒன்றிய மோடி அரசு செய்யும் தவறு களை எந்த வகையிலும் விமர்சிக் காமல் இருக்கக்கூடிய நிலையை பார்க்கிறோம். இது தான் எதார்த் தமான ஒரு நிலை. வரும் 2024 நாடா ளுமன்றத் தேர்தலில் மனிதநேய மக் கள் கட்சிக்கு கண்டிப்பாக போட்டி யிடக்கூடிய ஒரு வாய்ப்பை தர வேண் டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என நிர்வாக குழு  முடிவு செய்துள்ளது. திமுக ஆட்சி  சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளை செய்வதை  நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகி றோம். தொடர்ந்து செய்வார்கள் என்ற  நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கி றது என்றார்.