கோவை, ஆக.31- கழிவுநீர் கால்வாயை தூய் மைப்படுத்த ஊழியர்களை நியமிக் குமாறு, கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிபிஎம் கவுன் சிலர் கோரிக்கை விடுத்துள்ளார். கோவை மாநகராட்சி கூட்டம் வியாழயன்று மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. கோவை மாநகரில் உள்ள நூறு வார்டுகளில் சாலை, சாக்கடை திட்டப்பணிகள், மழைநீர் வடிகால், ஆழ்துளை கிணறுகள் பராமரித்தல் மற்றும் சிறப்பு திட்டங்கள் ஆகிய பணிகள் மேற்கொள்வதற்கான தீர்மானங்களாக நிறைவேற்றப் பட்டன. மாநகரம் முழுவதும் தெரு நாய்கள் பிடித்து கருத்தடை செய்யும் நிலையில், இன்னும் பல பகுதிகளில் தெரு நாய்களால் தொல்லை ஏற்படுவதாக கூட் டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பி னர்கள் புகார் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்றக்குழுத் தலைவர் வி.ராம மூர்த்தி பேசுகையில், மாநகரப் பகுதிகளில் சாலைகள் பழுத டைந்த நிலையில் உள்ளதால், கனரக லாரிகள் செல்லுவதால் சாலைகள் மேலும் பழுதடையும் நிலை ஏற்படுகிறது. நகராட்சி குப்பை மற்றும் திடக்கழிவு பணி களுக்கு வழக்கமான சாதாரண இலகு ரக வாகனங்களையே பயன் படுத்த வேண்டும். மேலும், தற் போது மாநகராட்சி தூய்மைப் பணிகளுக்கு தனியார் ஒப்பந்த தாரர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது. இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவ தாகவும், இதை தவிர்க்க வேண் டும். மாநகரில் கழிவுநீர் கால் வாயை தூய்மைப்படுத்துவதற்கு அனைத்து வார்டுகளிலும் நிரந்தர ஊழியர்கள் பிரித்து வழங்கப்பட வேண்டும். அதேபோல மாநக ராட்சி ஒதுக்கீடு செய்கிற நூலக நிதியை நூலக கட்டிடம் கட்டுவ தற்கு மட்டும் பயன்படுத்த வேண் டும். சுடுகாடு பராமரிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதேபோல மாநகரம் முழு வதும் சூயஸ் பணிகளால், சாலை கழிவுநீர் கால்வாய் தூய்மை பணி களை மேற்கொள்வதற்கு இடை யூறு ஏற்படுவதாகவும், அதே போல ஒப்பந்ததாரர்கள் மேற் கொள்ளும் பணிகளை அவர்களே நிறைவேற்றி தர வேண்டும். இதில் அரசியல் கட்சி பொறுப்பில் இருப் பவர்கள் தலையீடு செய்வதால் பணிகள் மிகுந்த தாமதமடைகிறது. எனவே, ஆணையாளர் தலை யிட்டு பணிகளை முறைப்படுத்த வேண்டுமென சிபிஎம் உறுப்பினர் கள் பூபதி, கண்ணகி ஜோதிபாசு, சுமதி ஆகியோர் கேட்டுக் கொண் டனர். இக்கூட்டத்தில் மாநகர ஆணை யாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர் கள் மற்றும் மாநகராட்சி அலுவலர் கள் பங்கேற்றனர்.