சேலம், நவ.8- இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக இந் திய மாணவர் சங்கத்தினர் வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசு இந்தி மொழியை நாடு முழுவதும் “ஒரே நாடு ஒரே மொழி” என்ற சுயநலத்தோடு அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது. செம்மொழியான தமிழ் மொழியை அழித்து, இந்தி மொழியை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் மோடி அரசை கண்டித்து இந்திய மாணவர் சங் கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக செவ் வாயன்று இந்திய மாணவர் சங்கத்தினர் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு தமி ழகம் முழுவதும் நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் இருபாலர் அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாண வர் சங்க கிளை தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். போராட்ட நோக்கம் குறித்து மாவட்ட செயலாளர் பவித்ரன் உரையாற்றினார். இதில், மாவட்ட தலைவர் அருண்குமார், மாவட்ட துணைச்செயலாளர் டார்வின், துணைத்தலைவர் லோகேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் கோகுல் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் மகேந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், மாணவர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கோகுல், மாநிலக்குழு உறுப்பினர் பவித்ரன், மாவட் டக்குழு உறுப்பினர் அமிர்தலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட துணைத்தலைவர் தீபிகா தலைமை வகித் தார். இதில், மாவட்ட தலைவர் மு.தங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஆதித்யன் ஆகி யோர் கலந்து கொண்டனர். குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரி யில் ஆர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் தே.சரவணன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.