சேலம், பிப்.10- மூன்று தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வரும் பகுதியில், நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் மலைவாழ் மக்கள் கால் நடைகளுடன் சாலைமறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், பனமரத்துப் பட்டி பகுதியை அடுத்து உள்ளது சூரியூர் கிராமம். வனப்பகுதிக்கு இடையில் உள்ள வருவாய் துறை நிலத்தில் 50க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் 3 தலைமுறைகளைக் கடந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டு காலமாக பட்டா கேட்டு போராடி வரும் இவர்களை அங்கிருந்து காலி செய்ய வேண் டும் என சேலம் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த கிராம மக்கள், பட்டா வழங்குவதற்கான சட்டரீதியான உத்தரவை பெற்றனர். இருப்பினும் சூரியூர் மக்களுக்கு இதுவரை பட்டா கிடைக்கவில்லை. மேலும், அவ்வப் போது வருவாய் துறையினர் மற்றும் வனத்துறையினர் காவல் துறை யினர் உதவியோடு கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்வ தால் சூரியூர் கிராம மக்கள் வேத னையில் உள்ளனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தர வையும் மதிக்காமல் அதிகாரிகள் நடந்துகொள்வதாக குற்றஞ்சாட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு சூரியூர் கிராம மக்கள் ஆடு, மாடுகளுடன் சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.