திருப்பூர், ஏப்.24 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில், “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட் டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் நலத்துறையின் சார்பில் புதனன்று இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் புஷ்பா தேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ , மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் ஆலோசனை வழங் கப்பட்டது. உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்பு, பட்டயப்ப டிப்புகள் என்னென்ன உள்ளன என்பதை தெரிந்து கொள்ளவும், 12 ஆம் வகுப்பு முடித்த பின்னர், அடுத்து என்ன படிக்கலாம், கனவு களை நனவாக்கும் படிப்புகள், உயர்கல்விக் குச் செல்ல உதவித்தொகை வாய்ப்புகள், தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக் கும் உயர்கல்விக்கான வழிகாட்டுதல், சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியில் என்ன படிக்கலாம், வருங்காலத்தை வளப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், போட்டித்தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத் துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் புகழ் பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டப்பட்டது. இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி யால் மாணவர்கள் தங்களது எதிர்கால குறிக் கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும் மாண வர்கள் தோல்விகளை, வெற்றிகளின் தொடக் கமாக எடுத்துக் கொண்டு முன்னேற வேண் டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், உயர்கல்வி வழிகாட்டுநர் மதி, ஆதிதிராவிரடர் நலவட்டாட்சியர் தேவ ராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாத்கு மார், உத்வேகப் பயிற்சியாளர் பெலிக்ஸ் மற் றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண் டார்கள். தருமபுரி இதேபோன்று, தருமபுரி மாவட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறையின் சார்பில் 12-ஆம் வகுப்பு பயின்ற 300 மாணாக்கர்களுக்கு ”என் கல்லூ ரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி யில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, ஆதிதிராவிடர் நல அலுவலர் சாகுல் அமீத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற் றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண் டனர்.