districts

img

தீண்டாமை கொடுமையே இல்லையென்ற நிலை வர வேண்டும்

சேலம், பிப்.17- தீண்டாமை மற்றும் வன்கொடு மையே இல்லை, அது சார்ந்த வழக் குகள் நீதிமன்றங்களில் இல்லை என்கிற நிலை வரும்போதுதான் உண்மையான மகிழ்வைத்தரும் என சேலத்தில் தீண்டாமை வன் கொடுமை வழக்குகளை விசாரிக் கும் தனி நீதிமன்றத்தை திறந்து வைத்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் உரையாற் றினார்.  சேலம் மாவட்ட நீதிமன்ற வளா கத்தில் ரூ.2.5 கோடி மதிப்பில் தீண் டாமை மற்றும் எதிரான வழக்கு களை விசாரிக்க தனி நீதிமன்றம்  கட்டப்பட்டுள்ளது. இதேபோன்று 32 வழக்கறிஞர் அறைகள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் கூடுதல் நீதி மன்றம் கட்டப்பட்டுள்ளது. இந்நி லையில், சனியன்று புதிய நீதிமன் றத்தினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் திறந்து வைத்தார். சேலம் மாவட்டம், ஆத் தூர் கூடுதல் நீதிமன்றத்தை காணொளி வாயிலாகவும் நீதிபதி  சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரை யன், மஞ்சுளா, மாவட்ட முதன்மை  நீதிபதி சுமதி, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அருண் கபிலன்  உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். அப்போது, நீதிபதி சுப்பிரமணி யன் பேசுகையில், இளம் வழக்க றிஞர்கள், மூத்த வழக்கறிஞர்களி டமிருந்து எந்தவித தயக்கமுமின்றி  வாத திறமை, நீதிமன்ற நடை முறைகள் என எல்லாவற்றையும் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். புதிய நீதிமன்றங்கள் திறப்பு மகிழ்ச்சியளிக்கிறது. எனி னும் குடும்ப நல நீதிமன்றங்கள் தீண்டாமை மற்றும் வன்கொடு மைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றங்களில் வழக்குகள் இல்லை என்ற நிலையே சமுதாயத்தில் உண்மை யான மகிழ்ச்சியை உருவாக்கும். இதுபோன்ற நீதிமன்றங்கள் செயல்படாத நாளையே சமுதா யம் மகிழ்ச்சியாக பார்க்கக்கூடிய நிலை உள்ளது. குடும்ப நல வழக் குகளை விசாரிக்கும் போது வேதனையாக உள்ளது. சகிப்புத் தன்மை வேகமாக குறைந்த வரு வதன் அடையாளமாக குடும்பநல நீதிமன்றங்களில் அதிகளவிலான வழக்குகள் தாக்கல் ஆகின்றன. 1986 ஆம் ஆண்டு வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே குடும்ப நல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த  நிலையில் தற்போது சென்னை யில் உள்ள 8 குடும்ப நல நீதிமன்றங் களில் 56 ஆயிரம் வழக்குகள் நிலு வையில் உள்ளன என்பது வேதனை  அளிக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகை யில் இது குறைவான எண்ணிக்கை தான் என்றாலும், குடும்ப நல வழக்குகள் மற்றும் சிறப்பு வழக் குகளில் வழக்கறிஞர்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும். இதன்மூலம் இது போன்ற வழக்குகள் குறையும். இதை சமூக சேவையாக கருதி வழக்கறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்களை தொடர்ந்து ஊக்குவிக்க வேண் டும். அவர்களுக்கு தொடர் வாய்ப்பு களை உருவாக்கிக் கொடுத்து, வழக்காடும் தன்மையை கற்றுக் கொடுக்க வேண்டும், என்றார்.