கோவை, செப்.18- நரகமும், சொர்க்கமும் நம் எண் ணத்தில் தான் உள்ளது. ஒட்டியிருக் கும் பதவி உதிர்ந்தால், இதோடு ஒட்டி யிருப்பவைகளும் உதிர்ந்து விடும். பெயர் மட்டுமே நிரந்திரமானது என கி.ரா.விருதினை அளித்து வெ.இறை யன்பு பேசினார். ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகர் வட்டத் தின் 2023 ஆம் ஆண்டுக்கான கி.ரா விருது வழங்கும் விழா மற்றும் கி.ரா. நூற்றாண்டு நிறைவு விழா, கோவை பீளமேடு பிஎஸ்ஜி பொறியியல் கல் லூரியில் ஞாயிறன்று நடைபெற்றது. விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு. வேலாயுதம் வரவேற்றார். 2023 ஆம் ஆண்டுக்கான கி.ரா.விருதுக்கான சான்றிதழ், ரூ.5 லட்சத்துக்கான காசோ லையை எழுத்தாளர் எஸ்.வி.ராஜ துரைக்கு, தமிழ்நாடு அரசின் முன் னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு வழங்கினார். இதன்பின் வெ.இறையன்பு பேசுகையில், நல்ல மனிதர்கள், சிறந்த இலக்கியவாதி களுக்கு விருது வழங்கும் போது, நமக்கே விருது வழங்கிக்கொள்வது போல் இருக்கும். எழுத்தாளர், எழுத் துகளை விட மேன்மையாக இருக்க வேண்டும். படைப்பாளரையும், படைப்பு இலங்கியங்களையும் விரு துகள் அளித்து கொண்டாடுவது சிறப் பானது. பெற்றோர்கள் சமூக சிந் தனையுள்ளவர்களாக, நேர்மை யான அதிகாரிகளாக இருந்தால், அவர்களின் குழந்தைகளும் சமூக சிந்தனையாளர்களாக, நேர்மை யானவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. வரலாறு, பூகோளம், விலங்கி யல், பொருளாதாரம், இலக்கியம், திரைத்துறை, ஓவியம் என ஒவ்வொ ருவருக்கும், ஒவ்வொரு துறை பிடித் தமானதாகத இருக்கும். ஆனால், அனைத்துத்துறை குறித்தும் படித்து, அதுதொடர்பாக, எழுதுவது எழுத்தா ளர் எஸ்.வி.ராஜதுரையின் தனிச் சிறப்பு. இவர் மொழிபெயர்ப்பு நூல் களிலும் தமிழுக்கு தகுந்த மாதிரி கலைச்சொற்களை உருவாக்கித் தந் துள்ளார். எண்ணற்ற படைப்புகளை,
வித்தியாசமான தலைப்புகளில் எழு தியுள்ளார். ஆதிக்க சக்திகளுக்கு எதி ராக, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இவரது குரல் ஒலிக்கிறது. இன்றைய இளைஞர்கள் படித்துப் பின்பற்றும் நூல்களை இவர் படைத்துள்ளார். பதவி என்பது நம்மோடு ஒட்டியிருப் பது. பதவி முடிந்தவுடன் ஒட்டியி ருப்பவை உதிர்ந்து விடும். அதன் பிறகு, நம்மோடு ஒட்டியிருந்தவர் களும் உதிர்ந்து விடுவார்கள். ஆகவே, மனிதர்களைத் தொழிலா கப் பார்க்காதீர்கள். ஒருவரின் பெயர் மட்டுமே நிரந்தரமானது. நரகமும், சொர்க்கமும் நம் எண்ணத்தில் தான் உள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில், திரைக்கலைஞர் சிவகுமார், சக்தி மசாலா மேலாண் இயக்குநர்கள் பி. சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, வழக் கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை ஏற்புரையாற்றுகையில், பணத்தை எதிர்பார்த்து நான் எழுத வில்லை. என் புத்தகங்களால் பலன டைந்தவர்கள், எனக்கு பணம் தந்தது மில்லை. எனக்கு கி.ரா.விருது அளித் தமைக்கு நன்றி. இப்பணத்தில் பெரு மளவை சமூகப் பணிகளுக்காக கொடுப்பேன், என்றார். இந்நிகழ்ச்சி யில், எஸ்.வி.ராஜதுரையின் மனைவி சகுந்தலா, விஜயா பதிப்பகத்தின் நிர் வாகி சிதம்பரம், எழுத்தாளர்கள், விஜயா வாசகர் வட்டத்தை சேர்ந்த ஏராளமான வாசகர்கள் கலந்து கொண்டனர். முனைவர் உஷாராணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி னார்.