திருப்பூர், ஜூன் 6 - ஒடிசா ரயில் விபத்தில் பலியான மக்களுக்கு திருப்பூர் ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்க அலுவலகம் முன்பு செவ்வாயன்று நடைபெற்ற இந்நி கழ்வுக்கு சங்க தலைவர் எஸ்.எம்.பழனிச்சாமி, சங்க செயலா ளர் டி.ஆறுமுகம், சங்க பொருளாளர் எஸ்.செல்வம், திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.உன்னிகிருஷ்ணன், சுமைப் பணி சங்க கமிட்டி உறுப்பினர் த.ஜெயபால் ஆகியோர் பங்கேற்றனர். இதில் சுமைப்பணி தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.