districts

ஈரோடு: இடி, மின்னலுடன் பலத்த மழை

ஈரோடு, மே 8- ஈரோடு மாநகர் பகுதி, சென்னி மலை சுற்றுவட்டாரப் பகுதி, அந்தி யூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த  சில நாட்களாக அக்னி நட்சத்திரம் வெயில் வாட்டி வருகிறது. அனல்  காற்றுடன் வெயில் வாட்டி வருவ தால் பொதுமக்கள் கடும் அவதி  அடைந்து வருகின்றனர். எனினும்  அவ்வப்போது இரவு நேரங்களில்  கோடை மழை பரவலாக பெய்து  வருகிறது.இந்நிலையில் சனி யன்று ஈரோடு மாவட்டத்தில் வழக் கம்போல் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வந்தது. மாலை  வரை வெயிலின் தாக்கம் அதிகமா கவே இருந்தது. இந்நிலையில் இரவு 7 மணி முதல் பல்வேறு பகுதி களில் சூறாவளி காற்றுடன் மழை  பெய்ய தொடங்கியது. குறிப்பாக, ஈரோடு மாநகர் பகுதி, சென்னி மலை சுற்றுவட்டாரப் பகுதி, அந்தி யூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்தது.  இதேபோல் அந்தியூர் காலனி பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்தது. தங்கபாளையம் பகுதி யில் மரக்கிளை மின்கம்பம் மீது விழுந்து மின்தடை ஏற்பட்டது. இதேபோல் தங்கபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து மின்தடை ஏற்பட்டது.

இதனால் ஈச்சபாறை, வேதகாரன்  குட்டை, அந்தியூர் காலனி, போன்ற பகுதியில் மின்தடை ஏற் பட்டது. மேலும், ஈச்சபாளையம் உட்பட்ட பகுதிகளில் ஞாயிறன்று அதிகாலை 5 மணிக்கு மின் வினி யோகம் வந்தது. இதனால்  மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சூறாவளி காற்றால் மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் மின்கம் பங்கள் சாய்ந்தும், மரக்கிளைகள் விழுந்தும் மின்தடை ஏற்பட்டது. நிரம்பிய தடுப்பணைகள் மேலும், சனியன்று இரவு 9  மணி முதல் 11 மணி வரை தல மலை, கோடிபுரம் நெய்தாள புரம், ஒசூர், சிக்கள்ளி, பனக் கள்ளி, கெட்டவாடி ஆசனூர், குளி யாடா, திகனாரை ஆகிய பகுதி யில் பலத்த மழை பெய்தது. வனப் பகுதியிலும் பலத்த மழை பெய் தது. இதனால் வனப்பகுதியில் உள்ள குளம் குட்டைகள் நிரம்பி உள்ளது. பலத்த மழையால் விவ சாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. தாளவாடி, திகனாரை மற் றும் சூசைபுரம் அருகே உள்ள  ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்  மழையால் 20க்கும் மேற்பட்ட  தடுப் பணைகள் நிரம்பி வழிகிறது. மழை நீர் அனைத்தும் வீணாக கர்நாடகா மாநிலம் சிக்கொலா அணைக்கு செல்கிறது. இதனால்  ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேமிக்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை வைத்துள்ளனர்.