districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

எலச்சிபாளையத்தில் கடும் பனிமூட்டம்

எலச்சிபாளையத்தில் கடும் பனிமூட்டம் நாமக்கல், பிப்.9- எலச்சிபாளையம் பகுதியில் நிலவும் கடும் பனிமூட்டத் தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள  எலச்சிபாளையம் பகுதியில் காலை நேரத்தில் அளவுக்கு அதி கமான பனி படர்ந்து காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆத்தூர் - ஈரோட்டை இணைக்கும் முக்கிய சாலையாக எலச்சிபாளையம் சாலை உள்ள நிலை யில், அதிகளவு பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து வாகன ஓட்டிகள் கவன மாக வாகனங்களை இயக்குமாறு உள்ளூர் காவல்துறை  சார்பிலும், நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் அறிவுறுத்தப்பட் டது. நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதி காலை நேரத்தில் கடும் பனிமூட்டத்தால் சாலைகளே தெரி யாத நிலை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடகம் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு

சேலம், பிப்.9- எடப்பாடி பேருந்து நிலையத்தில், சாலை பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவர்கள் நாடகம் வாயிலாக விழிப் புணர்வு ஏற்படுத்தினர். சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம், எடப்பாடி பேருந்து நிலையத்தில் சங்ககிரி வட்டா ரப் போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியம் தலைமை யில் “சாலை பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு” என்ற தலைப் பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவர்கள் நடனமாடியும், நாடகம் வாயிலாகவும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து பொதுமக்களுக்கு சாலை  பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செந்தில்குமார், புஷ்பா மற்றும் எடப்பாடி மற்றும் சங்ககிரி ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காவல் அதிகாரிகள் இடமாற்றம்

சேலம், பிப்.9- சேலம் மாநகர நுண்ணறிவுப்பிரிவில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாநகர காவல் துறையில் ஆட்டையாம்பட்டி, காரிப்பட்டி காவல் நிலையங்கள் புதிதாக இணைக்கப் பட்டுள்ளதால், நுண்ணறிவுப்பிரிவில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அதன்படி, பள்ளப்பட்டி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முத்துசாமி அன்னதானப்பட்டிக்கும், அங்கு பணி யாற்றி வந்த கார்த்தி ஆட்டையாம்பட்டிக்கும் மாற்றப்பட் டுள்ளனர். இதுதவிர டவுன் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், மத்திய சிறை நுண்ணறிவுப்பிரிவு சிறப்பு  உதவி காவல் ஆய்வாளராகவும், கொண்டலாம்பட்டி சிறப்பு  உதவி காவல் ஆய்வாளர் அன்பழகன், பள்ளப்பட்டி காவல்  நிலைய நுண்ணறிவுப்பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாள ராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போலி சமூக ஆர்வலர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேசன் கடைகளை பூட்டி வேலைநிறுத்தம் செய்ய முடிவு

திருப்பூர், பிப். 9 – சமூக ஆர்வலர் என்ற பெயரில் அவதூறு பரப்பி பணம் பறிக்கும் நபர்  மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து  கைது செய்யாவிட்டால் அனைத்து ரேசன் கடைகளையும் பூட்டி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடு படுவது என்று அனைத்து தொழிற் சங்கக் கூட்டுக்குழு தீர்மானித்துள் ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத் துறை அனைத்து தொழிற்சங்க கூட்டு  நடவடிக்கைக்குழு கூட்டம் வியாழ னன்று அம்மாபாளையத்தில் டாக் பியா மாவட்டச் செயலாளர் ஏ.பாஷா  தலைமையில் நடைபெற்றது. இதில்,  கூட்டுறவுப் பணியாளர் சங்க சிஐடியு  மாவட்டத் தலைவர் பி.கௌதமன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தங்கவேல், எல்பிஎப் மாநிலத் தலைவர் பி.பாலசுப்பிரமணியம், ஏடிபி பொருளாளர் இந்திராகாந்தி உள்பட மேற்கண்ட சங்க நிர்வாகி கள் பங்கேற்றனர். கூட்டுறவு நிறுவனங்களில் அனைத்து பணியாளர்களின் பணி  பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட  நிர்வாகம் உறுதியான நடவடிக்கை கள் எடுக்க வேண்டும். சமூக ஆர்வலர் கள் என்ற போர்வையில் கூட்டுறவு நிறுவனங்கள் மீது அவதூறான செய் திகளை பரப்பும் நபர்கள் மற்றும் பணி யாளர்களை அச்சுறுத்தி பணம்பறிக் கும் மோசடி கும்பலை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் பணியாளர்களை குறிவைத்து போலியான லெட்டர் பேடில் தொடர்ச்சியாக பொய்யான புகார் மனுக்களை முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பி, அரசுக் கும், கூட்டுறவுத் துறைக்கும் அவ தூறு ஏற்படுத்தும் நபர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சி தொழிற்சங்க பெயரையும், முதல்வர் படத்தையும், லெட்டர்  பேடில் மோசடியாக பயன்படுத்து வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.  இப்பிரச்சனையில் முதல்வரின்  கவனத்தை ஈர்க்கும் வகையில்  தொடர் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது, வரும் பிப்ரவரி 26 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடத்துவது என முடிவு செய்யப்பட் டது. இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு  கிடைக்காவிட்டால் இம்மாவட்டத் தில் அனைத்து ரேசன் கடைகளையும்  கூட்டுறவு நிறுவனங்களையும் பூட்டி விட்டு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்துள் ளனர். சிஐடியு மாவட்டச் செயலாளர்  மகேந்திரன் நன்றி கூறினார்.

விபத்து: ஒருவர் பலி

விபத்து: ஒருவர் பலி திருப்பூர், பிப்.9- காங்கயம், களிமேடு வக் கீல் வீதியைச் சேர்ந்தவா் மணி (70). இவர், காங்கயம், கோவை சாலையை தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை காலை  கடந்து செல்ல முயன்றுள் ளார். அப்போது, அந்த வழி யாக வந்த காங்கயம் முஸ் லிம் வீதியைச் சேர்ந்த ஹர் ஷத் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில், மணி பலத்த காயமடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முத லுதவி சிகிச்சை அளிக்கப் பட்டு, மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில்  மணி உயிரிழந்தார்.  இது குறித்து காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு

திருப்பூர், பிப்.9- கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன் னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 சார்பில் வெள்ளியன்று கல்லூரி வளா கத்தில் உள்ள குமரன் அரங்கில் கொத்தடிமை தொழிலாளர்  முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.  கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன் னிட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ பிரதிநிதி  மது கார்த்திக் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புனர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ  செயலர் சுந்தரம் தலைமையில் மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்விற் கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும்  அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் செய்திருந்த னர்.

பிப்.13 ல் வாழ்ந்து காட்டுவோம் திட்ட முகாம்

பிப்.13 ல் வாழ்ந்து காட்டுவோம் திட்ட முகாம் திருப்பூர், பிப்.9- திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 5 வட்டாரங்களில் 122 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இயங்கி  வரும் மகளிர் தொழில் முனைவோர்  தங்கள் தொழில்களில்  அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உயர்தர  சேவைகளையும் ஒரே நிலையத்தில் பெற, தகுதியான மகளிர்  தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய் யும் முகாம் வரும் பிப்.13 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் அறை எண்:120ல் தமிழ்நாடு ஊரக புத் தாக்க திட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது. இம்முகாம் பற் றிய விவரங்களுக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் மா.நாகராஜன் 9385299723 என்ற தொலை பேசி வாயிலாகவோ அல்லது, அறை எண் 713, 714, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரியில் நேரிலோ  தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள பிப்.13 ஆம் தேதிக்கு முன்பாக கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் 100 சதவீத மருத்துவர்கள்  அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

நீலகிரியில் 100 சதவீத மருத்துவர்கள்  அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி நீலகிரி, பிப்.9- நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 57 காலிப்  பணியிடங்கள் நிரப்பப்பட்டு, தற்போது 100 சதவீத மருத்து வர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், உதகையில் ரூ.461.18 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரிக்கு கட்டடங்கள் கட்டப்பட்டு வரு கின்றன. இந்தப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கோத்தகிரியில் ரூ. 3.03 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவுக்கான கட்டடங்கள், குன்னூ ரில் ரூ. 2.66 கோடியில் ரோட்டரி கிளப் சார்பில் மேற்கொள் ளப்படும் புனரமைப்புப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரம ணியன், உதகையில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடங் கள் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. மே மாதத்துக்குப் பின் முதல்வர் மு.க.ஸ்டா லின் இதை திறந்துவைக்க உள்ளார். தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உள்பட 20 மாவட்டங்க ளில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக் குறை இருந்து வருகிறது. இதற்காக புதன்கிழமை நடை பெற்ற மருத்துவர்கள் தேர்வில் 1021 மருத்துவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 20 மாவட்டங்களிலும் விரை வில் பணியமர்த்தப்பட உள்ளனர். அதேபோல, மாவட்டத் தில் உதகை மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப  சுகாதார நிலையங்களில் 57 காலிப் பணியிடங்கள் நிரப்பப் பட்டு, தற்போது 100 சதவீத மருத்துவர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளனர் என கூறினார்.  ஆய்வின்போது சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப்  சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் மு.அருணா, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கௌசிக், உள்பட அரசு துறை  அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

ஹாக்கி போட்டி: ஈரோடு அணி சாம்பியன்

ஈரோடு, பிப்.9- ஈரோடு மாவட்டம், பாளையங்கோட்டையில் நடைபெற்ற  டாக்டர் கே.எம்.கோப்பைக்கான மாநில அளவிலான மகளிர்  ஹாக்கிப் போட்டியில் ஈரோடு அணியான கே.ஓ.எம்.ஹாக்கி  கிளப் சாம்பியன் பட்டம் வென்றது. டாக்டர் கே.எம்.கோப்பைக்கான மாநில அளவிலான மகளிர் ஹாக்கிப் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த புதன், வியாழன் ஆகிய  இரு தினங்கள் நடைபெற்றது. லீக் மற்றும் சூப்பர் லீக் அடிப் படையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஈரோடு கே.ஓ.எம்.  ஹாக்கி கிளப் முதலிடத்தைப் பிடித்தது.  திருவாரூர் ஜூவி ஹாக்கி கிளப் அணி இரண்டாவது இடத் தையும், திருநெல்வேலி ஹாக்கி அகாடமி மூன்றாவது இடத் தையும், திருப்பூர் ஜிவிஜி கல்லூரி அணி நான்காவது இடத் தையும் பிடித்தன. முடிவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு டாக்டர் கே.எம். கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டது.

முன் அறிவிப்பின்றி கேண்டீன் மூடல் மாணவர்கள் தவிப்பு

கோவை, பிப்.9- கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கேண்டீன் வசதியின்றி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்  மூன்றாயிரத் திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் விடுதி மாணவர்கள் மற்றும் வீட்டில் இருந்து கல்லூ ரிக்கு வருபவர்கள் என நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள  கேண்டீனை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஒப்பந்த  முடிவு காரணமாக, கடந்த ஒரு வாரமாக எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி கேண்டீன் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால், கல்லூரி மாணவர்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்வீரம்பாளையத்திற்கு சென்று  உணவு உண்ண வேண்டிய அவல நிலை நிலவி வருகிறது.  எனவே, மாணவர்களின்  அவல நிலையை கருத்தில் கொண்டு  பல்கலைக்கழக நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கழைக மாணவர்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.

வேலை வாங்கித் தருவதாக மோசடி

வேலை வாங்கித் தருவதாக மோசடி கோவை, பிப்.9- வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி  செய்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோவை டவுன்ஹால் பகுதியில் வசித்து வருபவர் பல்கீஸ் பேகம்(40). இவரது மகனை வெளிநாட்டில் வேலை யில் சேர்க்க துடியலூர் அருகில் தொப்பம்பட்டி பகுதியில் இயங்கி வரும் HR Solutions என்ற நிறுவனத்தில் தனது மகனின் பாஸ்போர்ட் மற்றும் பணம் 80,000 ரூபாயை செலுத்தி உள்ளார். ஆவணங்கள் மற்றும் பணத்தை பெற்று  கொண்ட நிறுவனம் பணியாணை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.  இதனையடுத்து ஆவணங்களை திருப்பிக் கேட்ட போது, அதனை திருப்பி தர நிறுவனம் மறுத்ததுடன், பணத்தையும் திருப்பி தராததால் பல்கீஸ் பேகம் துடிய லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் HR Solutions நிறுவவனத்தைச் சேர்ந்த அனிதா, பாலாஜி, சின் னிஸ் நாயர் ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

கோவை, பிப்.9- கோவை மாவட்டத்தில் பொது விநியோ கத் திட்ட குறைதீர் முகாம் இன்று (சனிக்கி ழமை) நடைபெறவுள்ளது. இதுகுறித்து அத்துறை சார்பில் வெளி யிட்ட அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு  மக்களும் பயன்பெறும் வகையில், ஒவ் வொரு மாதமும் 2-ஆவது சனிக்கிழமை யன்று சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது.  அதன்படி, நடப்பு மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம், இன்று (சனிக்கிழமை) வட்டாட்சியர் அலுவ லகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவ லகங்களில் காலை 10 முதல் நண்பகல் 1 மணி  வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் மாற்றம், குடும்பத் தலைவர் புகைப்பட மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளித்து தீர்வு காணலாம் என்று அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

ஊராட்சி துணைத் தலைவர் மீது  தலைவர், உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

நீலகிரி, பிப்.9- முள்ளிகூர் ஊராட்சி துணைத்தலைவர் பதவி விலக வலியுறுத்தி ஊராட்சித் தலை வர் மற்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தி யுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றி யம் முள்ளிகூர் ஊராட்சியில் 9 வார்டுகள்  உள்ளன. இதில் பிரேமா ராதாகிருஷ்ணன் என்பவர் ஊராட்சித் தலைவராகவும், காம ராஜ் என்பவர் துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில், துணைத் தலைவர் காமராஜ் கடந்த 6 மாதங்களாக எந்த  ஒரு கூட்டங்களிலும் கலந்து கொள்ள வில்லை எனவும், வளர்ச்சி திட்டப் பணிக ளுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காமல் இடையூறு ஏற்படுத்துவதாகவும் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து முள்ளிகூர் ஊராட்சித் தலைவர் பிரேமா கூறுகையில், துணைத் தலைவர் காமராஜ், தன்னை கேட்காமல் பணி களை மேற்கொள்ளக் கூடாது என பெண் வார்டு உறுப்பினர்களை மிரட்டுகிறார். ஒப்பந்ததார்களுக்கு பணி முடிந்த பின் வழங் கும் காசோலைகளுக்கு கையொப்பமிட காலதாமதம் செய்து, அதை பயன்ப டுத்தி அவர்களிடம் பேரம்பேசி பணம்  கேட்கிறார் என்பன உள்ளிட்ட குற்றசாட்டு களை முன்வைத்தார். மேலும், இந்த பிரச்சனைகள் தொடர்பாக ஊராட்சி கூட்டத் தில் பேசப்பட்டு, வார்டு உறுப்பினர்களின் கோரிக்கை படி, காமராஜை மன்றதிலிருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.  இதுகுறித்து துணைத்தலைவர் காமராஜ்  கூறுகையில், கடந்த தீபாவளி சமயத்தில் ஒரே வாரத்தில் ரூ.26 லட்சத்திற்கான பில்லில்  கையெழுத்திட்டுள்ளேன். விளக்கம் தேவைப்பட்டதால் ஒரு குறிப்பிட்ட தனியார்  நிறுவன காசோலையில் மட்டும் கையெ ழுத்து போடவில்லை. இதை பிரச்சினை யாக கிளப்புகின்றனர். அதேபோல் மன்றக் கூட்டம் நடப்பது தொடர்பாக எனக்கு நோட் டீஸ் எதுவும் வழங்குவதில்லை என்றார்.

போதை பொருட்கள் விற்பனை – கடைகளுக்கு சீல்

கோபி, பிப்.9- ஈரோடு மாவட்டம், கோபி பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட பான்பரக், குட்கா பொருட்கள் விற்கப்ப டுவதாக கிடைத்த தகவலை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து கோபி, ஒத்தக் குதிரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், கோபி எஸ்டிஎன் காலனியில் உள்ள பெட்டிகடை யில் ஆய்வு மேற்கொண்ட போது 19 கிலோ எடைகொண்ட  தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, போதை பொருட்களை பறிமு தல் செய்த அதிகாரிகள், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து,  கடைக்கு சீல் வைத்தனர். இதேபோன்று, ஒத்தகுதிரை தனி யார் கல்லூரி அருகே உள்ள பேக்கரியில் ஆய்வு மேற் கொண்ட அதிகாரிகள், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களை கைப்பற்றி, கடைக்கு சீல் வைத்த னர்.