districts

img

2 ஆயிரம் பேருக்கு பணியாணையை முதல்வர் விரைவில் வழங்குவார்

கோவை, ஜூன் 27- இன்னும் பதினைந்து நாளில் 1021 மருத்துவர்கள், 980 மருந்து ஆளுநர்கள் ஆகியோருக்கு ஒரே  நாளில் 2000 பேருக்கு தமிழ்நாடு முதல்வர் பணியானை வழங்குவார்  என கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியில் தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனை யில் உள்நோயாளி பிரிவின் கட்டண  அறை திறப்பு, விஷ முறிவு சிறப்பு  மருத்துவ மாநில பயிற்சி மையம்  திறப்பு ஆகியவற்றை திறந்து வைத்த சுகாதாரத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் கோவை  அரசு மருத்துவமனை வளாகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நிதி நிலை அறிக்கையில் 110 அறி விப்பு அறிவிக்கப்பட்டது. மார டைப்பால் ஏற்படும் உயிர் இழப்பை தடுக்க இருதய பாது காப்பு மருந்து வழங்கும் நிகழ்வு  நடைபெறுகிறது.கோவை மதுக்கரை, மலுமிச்சம்பட்டி கிரா மத்தில் இந்த திட்டம் துவங்கப் படுகிறது. 3 கோடியே 37 லட்சத்தில்  இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பாம்பு கடி, நாய் கடியால் பாதிக் கப்படும் நபர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை  வழங்கப்படுகிறது. 30 ஆயிரம்  செவிலியர்களுக்கு விஷக்கடிக் கான பயிற்சி கோவை அரசு  மருத்துவ மனையில் வழங்கப்படு கிறது. மாநில அளவிலான மைய மாக கோவை அரசு மருத்துவ மனை உள்ளது. 8713 துணை சுகா தார நிலையங்கள்,2206 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும் இருதய  பாதுகாப்புக்கான மருந்து கையி ருப்பு வைக்கப்படும். இருதய பாது காப்பு மருந்து வழங்கப்படும்.கொரோனாவுக்கு பிறகு மார டைப்பு அதிகரிக்கிறது என தெரி வித்தத்தின் பேரில் இருதய பாது காப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பாம்பு கடி, நாய் கடியால் இரண்டு ஆண்டுக்கு முன்பு வரை  வட்டார அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு, மருத் துவக் கல்லூரி மருத்துவமனை களில் மட்டுமே மருந்துகள் இருந்தது. தற்போது ஆரம்ப சுகா தார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் என  2286 மையங்களில் பாம்பு கடிக்கும்  நாய் கடிக்கும் மருந்துகள் இருப்பு  உள்ளது. இந்நிலையில், அந்த மருந்தை எப்படி கையாள வேண் டும் என்பதற்கான பயிற்சி கோவை அரசு மருத்துவமனையில் செவிலி யர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், கோவை அரசு மருத்துவ மனை மாநில அளவிலான பயிற்சி  மையமாக அங்கீகரிக்கப்பட் டுள்ளது. 30 ஆயிரம் செவிலியர் கள் இந்த பயிற்சியில் ஈடுபடுகின் றனர். 

கோவையில் 26 அறைகளுடன் கூடிய கட்டண சிகிச்சை அறை  துவங்கப்பட்டுள்ளது. சேலம், கோவையில் நிதிநிலை அறிக்கை யில் கட்டண வார்டு துவங்கப்படும்  என அறிவித்து துவங்கப்பட் டுள்ளது. சூப்பர் டீலக்ஸ், டீலக்ஸ்,சாதார வார்டு என வகைப் படுத்தப்பட்டுள்ளது. ஹெல்ப்  டெஸ்க் உருவாகி வருகிறது.  கோவை அரசு மருத்துவமனை யில் நான்கு இடங்களில் ஹெல்ப் டெஸ்க் வாகனங்கள் நிறுத்தப் படுகிறது. கட்டணங்கள் சாதாரண வார்டுக்கு ஆயிரம் ரூபாய், டீலக்ஸ்க்கு இரண்டாயிரம், சூப்பர்  டீலக்ஸ்க்கு மூன்றாயிரம் ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.  தமிழகத்தில் முதல்வர் நக ராட்சி,மாநகராட்சி என பிரித்து நகர்ப்புற நல வாழ்வு மையங்களை துவங்கி வைத்துள்ளார். 708 மையங்கள் துவங்கி வைக்க முடி வெடுத்து ஓராண்டில் 500  மையங்கள் கட்டடம் கட்டப்பட்டுள் ளது. கோவையில் 65 மையங்கள் திறக்க முடிவு எடுத்து 49 மையங் கள் முதல்வர் திறந்து வைத்துள் ளார். 18 ஆக இருந்த அரசு தலைமை மருத்துவமனை கடந்த  இரண்டு ஆண்டில் 25 மருத்துவ மனையாக உயர்ந்துள்ளது. செவி லியர் பயிற்சி கல்லூரிகள் ஆறு  இருந்த நிலையில், தற்போது  11 புதிதாக துவங்கப்பட்டுள்ளது.  முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் கோவை பெரிய அளவில் பயன் பட்டு கொண்டு வருகிறது. 1021 மருத்துவர்களை நிரப்ப நேர்காணல் நடத்த அழைப்பு கொடுத்து 25 ஆயிரம் பேர் பங்கேற் றுள்ளனர். இதன் பொது தேர்வுக் கான முடிவு 15 நாளில் வெளி வரும். அதன் பின் 1021 மருத்து வர்களும் 980 மருந்து ஆளுநர் களும் என ஒரே நாளில் 2000 பேருக்கு முதல்வர் பணியாணை வழங்குவார். காலிப் பணியிடங் கள் நிரப்ப தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவிலான வழிகாட்டுதலின்படி பணி நியமனங்கள் நடைபெறு கிறது என்றார். முன்னதாக, கோவை இ.எஸ்.ஐ  மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு  விழா நடைபெற்றது. இதில், சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியம், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்  உள்ளிட்டோர் பங்கேற்று மருத்துவ  மாணவ - மாணவிகளுக்கு பட்டம் வழங்கினர்.