districts

தலைமையாசிரியர் போக்சோவில் கைது

சேலம், ஆக.11- மேட்டூர் அருகே மாணவர்களை மசாஜ்  செய்து விடச் சொல்லி, தொல்லை கொடுத்த  தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நிலை யில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டார்.  சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கருங் கல்லூரில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது.  இப்பள்ளியில் 144 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரிய ராக ராஜா என்பவர் உள்ளார். இவர் 5ஆம்  வகுப்பு பயிலும் மாணவிகளை, தனது அறைக்கு அழைத்து கை, கால்களை பிடித்து  விடுமாறும், மசாஜ் செய்து விடும்படியும் கூறி  தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. மேலும், மாணவிகளிடம் அத்துமீறி  நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டப் பட்டது. இதுகுறித்து, மாணவிகள் தங்களது பெற் றோர்களிடம் கூறி உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், வியாழ னன்று பள்ளிக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த, வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம், வட்டாட்சியர் முத்துராஜா மற்றும் வட்டார கல்வி அலுவலர் சின்ன ராசு ஆகியோர், பள்ளிக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், சமாதானம் அடையாத பெற்றோர், மேட்டூர்-மைசூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் துணைக் காவல் கண்காணிப்பாளர் மரிய முத்து தலைமையில் போலீசார் குவிக்கப் பட்டனர். தொடர்ந்து பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தனர். இதனால், போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இதையடுத்து, தலைமையாசிரியர் ராஜாவை மேட்டூர் மகளிர் காவல்நிலை யத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசார ணையில், பள்ளியில் பணியாற்றி வரும்  ஆசிரியைகளிடமும் அவர் அத்துமீறலில் ஈடு பட்டது தெரிய வந்தது. இதன்பின், பாதிக்கப் பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து, தலைமை ஆசிரியர் ராஜாவை கைது  செய்தனர்.