districts

img

விஷவாயு தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்

கோயம்புத்தூர், பிப். 10- கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்த இளைஞர் விஷவாயு தாக்கி  பலியான நிலையில், அவரின்  குடும்பத்திற்கு உச்ச நீதிமன்றத் தின் உத்தரவுப்படி ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. கோவை மாவட்டம், சுங்கம் சிந்தாமணி பின்புறம் மோகன சுந்தரலிங்கம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வியா ழனன்று(பிப்.8) சௌரி பாளை யத்தில் உள்ள அஸ்வினி தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவருடன், குணா மற்றும் ராமு என்ற இரு தொழிலாளர்களுடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென விஷ வாயு வெளியேற மோகன சுந்தர லிங்கம், குணா, ராமு ஆகிய மூவ ரும் மயக்கம் அடைந்தனர். இதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மோகனசுந்தரம் லிங்கம் உயிரிழந்தார்.

மற்ற இருவரும் ஆபத்தான நிலை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த மோகன சுந்தரலிங்கம் குடும்பத் திற்கு உச்ச நீதிமன்றத்தின் வழி காட்டுதலின் படி ரூ.30 லட்சம் அரசு  நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். கழிவுநீர் தொட்டியில் இறங்கி  சுத்தம் செய்ய வலியுறுத்திய அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகள் மீது எஸ்சி - எஸ்டி  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்

 கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மற்றும் தலித், முற்போக்கு அமைப்புகள் ஆட்சி யர் அலுவலகம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் வலியுறுத்தினர். மேலும், தீர்வு எட்டப்படும் வரையில் கலைந்து போவதில்லை என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, விஷவாயு தாக்கி இறந்த மோகன சுந்தர லிங்கத்தின் மனைவி லாவண்யா விடம் ரூ.30 லட்சத்திற்கான காசோ லையை கோவை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

முன்னதாக, இதற்கான போராட்டத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணைத் தலைவர்  யு.கே.சிவஞானம், மாவட்டச் செய லாளர் இரா.ஆறுச்சாமி, ஊர  வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார், திராவிட தமிழர் கட்சியின் மாநிலத்  தலைவர் வழக்கறிஞர் வெண் மணி, ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார், புரட்சிகர இளைஞர் முன்னணியின் தலை வர் வழக்கறிஞர் மலரவன் மற்றும்  நேரு தாஸ் உள்ளிட்ட முற்போக்கு  இயக்கங்களின் தலைவர்கள் ஈடுபட்டனர்.