நாமக்கல் மாவட்ட ஜெனரல் ஒர்க்ஸ் யூனியன் மாவட்ட செயலாளராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் பள்ளி பாளையம் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய தோழர் ஏ.காசி விஸ்வநாதனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, திமுக பேரூராட்சித் தலைவர் சகுந்தலா பாலசுப்பிரமணி யன், சிஐடியு ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணி, நாமக்கல் மாவட்ட செயலாளர் என்.வேலு சாமி, மாவட்ட தலைவர் எம்.அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.