திருப்பூர், ஜூலை 9 – திருப்பூரில் மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வு எம்.எஸ் நகர் பகுதியில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப் பட்டது. இதில் சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு நடனம், பாடல், ஓவியம், உடற் பயிற்சி என ஏராளமான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். கும்மி, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்வுகள் நடைபெற்றன. மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநக ராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப் பனவர், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாரா யணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரபல பிளாக் சீப் யூ டியூப் சேனல் அணி யினர் கலந்து கொண்டு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து இளைஞர்களின் பெருஞ் சலங்கை ஆட்டம், கும்மியாட்டம், காவடி யாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை நடை பெற்றன. மேலும், இளைஞர்களுக்கான டி.ஜே நடனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் நடனம் ஆடினர். இதே போல் சிறுவர், சிறுமியர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், ஓவியப் போட்டிகளும் நடைபெற்றன. மாதந் தோறும் ஒவ்வொரு பகுதியில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வு நடத்தப்படும். அடுத்த மாதம் 3ஆவது மண்டலத்தில் நடத்தப்படுவதாக மேடையிலேயே அறிவிக்கப்பட்டது.