திருப்பூர், ஜூன் 10 - திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மகிழ்ச்சி யான ஞாயிறு கொண்டாட்டம் நடைபெறுகிறது. மேயர் ந.தினேஷ்குமார் கடந்த மார்ச் 31 அன்று திருப்பூர் மாநகரில் “மகிழ்ச்சியான ஞாயிறு” திட்டம் சிறப்பாக செயல் படுத்தப்படும் என்று வரவு செலவு திட்டம்-2023-2024 கூட்டத் தொடரில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, பல்வேறு தனி யார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், கலைக் குழுக் கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து “மகிழ்ச்சியான ஞாயிறு” நிகழ்ச்சியினை ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 6 மணி முதல் காலை 9.30 மணி வரை மங்கலம் சாலையில் உள்ள எஸ்.ஆர்.நகர், பகுதியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், கும்மி, சலங்கை, ஒயிலாட்டம், கால் நடை கண்காட்சி மற்றும் போட்டி, சிறுவர்கள் மற்றும் பெரிய வர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், மேடை நிகழ்ச்சி கள், யோகா, சிலம்பம், பாரம்பரிய உணவுகள், வீர விளை யாட்டுகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற உள் ளன. மேலும், இந்நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம், கழிப் பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, திருப்பூர் மாநக ரில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை என அனை வரும் கலந்து கொண்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமையை “மகிழ்ச்சியான ஞாயிறாக” அமைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்வதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித் துள்ளது.