கோவை, ஜூலை 25- கோவை கொடிசியா வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை நான்கு அமைச்சர் கள் முன்னிலையில் கிராண்ட் மாஸ்டர்களி டம் ஒப்படைக்கப்பட்டது. 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதியன்று மாமல்லபுரத்தில் துவங்க உள்ள நிலையில், ஒலிம்பிக் ஜோதி கோவை கொண்டு வரப்பட் டது. இதையடுத்து கோவை பந்தயசாலை யில் இருந்து மக்கள் பார்வையுடன் ஒலிம்பி யாட் ஜோதி கொடிசியாவிற்கு கொண்டு செல் லப்பட்டது. அங்கு மேளதாளங்கள் முழங்க ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேசுகையில், தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த சர்வதேச செஸ் விளையாட்டு வாய்ப்பை ஏற்ப டுத்திக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 187 நாடுகளில் இருந்து போட்டியில் கலந்து கொள் கின்றனர், என்றார். இதையடுத்து வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் பேசுகையில், குறுகிய காலத் தில் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக முதல் வர் செய்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்தி லும் செஸ் விளையாட்டுப் போட்டியை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், திங்களன்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழா நடைபெற்று வருகிறது, என்றார். இதைத்தொடர்ந்து செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த செஸ்போட்டியில் கலந்து கொள்கின்றனர். நமது தேசமும், நமது மாநிலமும் செஸ் போட் டியில் சளைத்தவர்்கள் இல்லை என்ப தை இது காட்டுகிறது. ஒட்டுமொத்த தமிழக அரசு நிர்வாகமும் இப்போட்டியில் கவனம் வைத்துள்ளது, என்றார். வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச் சாமி பேசுகையில், செஸ் விளையாட்டு போட் டியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வும், ஆர் வமும் வரவேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இந்த விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது, என்றார். அதனைத்தொடர்ந்து 16 மாவட்ட பிரதிநிதி களிடம் மாதிரி ஜோதிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவாக கோவைக்கு கொண்டு வரப்பட்ட ஒலிம்பியாட் ஜோதி கிராண்ட் மாஸ் டர் சிறப்பு விருந்தினரிடம் ஒப்படைக்கப்பட் டது. முன்னதாக இந்நிகழ்ச்சியில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட ஆட்சி யர்கள், மேற்கு மண்டல காவல் துறை தலை வர் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணை யாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், செஸ் கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.