நாமக்கல், டிச.22- வெண்ணந்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாற்றுத் திறனாளிகள் சங்க கிளை அமைக்கப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், தொட்டியபட்டியில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்க புதிய கிளை அமைப்பு கூட்டம் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன், வெண்ணந்தூர் கிளைத் தலைவர் எம்.சுந்தர், தேங்கல்பாளையம் கிளைத் தலை வர் எம்.தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சங்கத்தின் புதிய கிளைத்தலைவராக சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.