ஈரோடு, ஆக. 7- மகளிர் உரிமைத் தொகை கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் சங்கத்தினர் பவானிசாகர் மார்க்கெட் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.லட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் ஆர்.நட ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏபி.ராஜூ உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.சுப்பிரமணி வாழ்த்தி பேசினார்.