districts

img

கட்டுமான மூலப்பொருட்களின் விலை உயர்வு

கோபி, பிப்.12- மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, கோபியில் ஹலோபிளாக் கல் உற்பத்தியாளர்கள் மூன்று நாள்  அடையாள வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அதன் சுற்று வட்டார பகு திகளான நம்பியூர், டி.என்.பாளையம், சிறுவலூர், கொளப்பலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஹலோபிளாக் கல் உற்பத்தி செய்யப்பட்டு வருகி றது. இந்நிலையில், ஹலோபிளாக் கல் உற்பத்தி செய்யப்படும் எம்சாண்ட்,  ஜல்லி, கற்கள் போன்ற மூலப்பொருட் களின் விலை, தற்போது 30 சதவீ தம் உயர்ந்துள்ளது. இதனால், ஹலோ பிளாக் உற்பத்தி செய்ய கூடுதல் செலவு  ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செய்யும் ஹலோபிளாக்ஸ் கல் விலையை திடீரென உயர்த்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அரசு தலையிட்டு மூலப்பொருட்கள் விலை உயர்வை வரைமுறைப்படுத்த நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என் பதை வலியுறுத்தியும், மூன்று நாட்க ளுக்கு ஹாலோபிளாக் கல் உற்பத்தி யும் வணிக பயன்பாட்டிற்கு சப்ளை செய்வதில்லை எனக் கூறியும், ஹலோ பிளாக் கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாகனங்களை நிறுத்தி, மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.