districts

img

தாய்ப்பால் தானம் கொடுத்து பிரபலமான பெண், கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிதானம்

சூலூர், ஆக. 5- சூலூரைச் சேர்ந்த பெண் தாய்ப் பால் தானம் கொடுத்து வைரலான நிலையில், புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு முடிதானம் கொடுத்து  மீண்டும் அசத்தியுள்ளார். கோவை மாவட்டம், கருமத்தம் பட்டி அருகே உள்ள கணியூர் பகுதி யைச் சேர்ந்தவர் தனியார் கல்லூரி  பேராசிரியர் மகேஸ்வரன். இவரது மனைவி சிந்து மோனிகா. திருமண மாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், 2  வயதில் வெண்பா என்ற பெண் குழந்தை  உள்ளது. தாய்ப்பால் தானம் குறித்து  சிந்து மோனிகா சமூக வலைதளப் பக்கங்களில் பார்த்து, தானும் அதே போல  தாய்ப்பால் தானம் செய்ய வேண் டும் என முடிவு செய்தார். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தாய்ப்பால் சேமிப்புக்காக செயல்பட்டு வரும் அமிர்தம் தாய்ப்பால் தானம் என்ற அமைப்பு மூலம் சிந்து மோனிகா, கடந்தாண்டு 10 மாதங்களாக 55 லிட்டர்  தாய்ப்பாலை சேகரித்து கோவை அரசு  மருத்துவமனைக்கு தானமாக வழங்கி யுள்ளார். இவரின் முயற்சி இந்தியா  புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்த கத்துக்கு பரிந்துரைக்கப்பட்டதின் பேரில், ஆசியா மற்றும் இந்தியா புக்  ஆப் ரெக்கார்ட்ஸில் அங்கீகரிக்கப் பட்டு, அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இவர் தாய்ப்பால் தானம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம்  பெண்களிடையே விழிப்புணர்பு ஏற் படுத்தி வருகிறார். இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தை களின் நிலையை அறிந்து தனியார் அமைப்பு மூலம் தனது தலை முடியை  முழுவதுமாக தானமாக வழங்கியுள் ளார். இதுகுறித்து அவர் கூறுகை யில், புற்றுநோயால் குழந்தைகள், இளம்பெண்கள், பாதிக்கப்படுவதால் அவர்களின் தலைமுடி உதிர்ந்து காணப் படும் அவர்களின் மன வலியை போக்கும் வகையில் தனியார் அமைப்பு  அவர்களுக்கு விக் செய்து கொடுத்து வருகிறது. இதுகுறித்து நண்பர்கள் மூல மாக தான் அறிந்த நிலையில், உடனடி யாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவுவது என முடிவு  செய்து, தனது தலை முடி முழுமை யாக தானமாக வழங்கி உள்ளேன். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக் கிறது. மேலும், தன்னுடைய இந்த  முயற்சிக்கு கணவர் முழு ஆதரவு அளிப் பதாகவும், பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்து ஆதரவாக இருப்பதால். சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதாக தெரி வித்தார்.