ஈரோடு, நவ. 27- தமிழ் மண்ணைப்பொருத்தவரையில், துப்பாக்கி கலாச்சரம் இல்லாத நிலையில், சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் துப் பாக்கி சத்தம் அதிகம் கேட்பதாக எழுத் தாளர் த.ஸ்டாலின் குணசேகரன் குற்றம்சாட் டினார். மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநி லப் பொதுக்குழுக் கூட்டம் ஈரோடு, மாணிக் கம்பாளையம், பாரதி அரங்கில் நடைபெற் றது. அதில் உரையாற்றிய மக்கள் சிந்த னைப் பேரவையின் மாநிலத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் மேலும் பேசிய தாவது, போதைப் பொருட்கள் பயன்பாட் டால் உருவாகிவரும் சமூக சீர்கேடு குறித்து பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. இளைஞர்கள், மாணவர்கள் இவற்றிற்கு எவ்வகையிலும் ஆட்படாமல் இருக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் . அத்திசை நோக்கிச் சிந்திக்கவும் செயல்படவும் மக்க ளைப் பொதுநோக்கில் சமூக உணர்வுடன் ஒருங்கினைப்பது இன்றைய காலத்தின் தேவையாகும். திரைப்படம் மிகவும் சக்திவாய்ந்த சாத னம். சமூகம் சார்ந்த , குடும்ப மேம்பாட்டை வலியுறுத்தும் சில திரைப்படங்கள் வரு வதை வரவேற்க வேண்டும். அதே சம யத்தில் நேரடியாகவோ , மறைமுகமாகவோ வன்முறைக் கலாச்சாரத்தை இளைஞர்கள் மனதில் விதைக்கும் சில திரைப்படங்கள் சமீபத்தில் வெளிவருவது கவலைதரத் தக்க தாகும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் தமிழ் மண்ணைப் பொறுத்தவரையில் துப்பாக்கிச் சத்தம் எங்கும் கேட்பதில்லை. அத்தகைய சூழலில் சில திரைப்படங்களில் துப்பாக்கிகளே அதிகம் பேசுகிற காட்சிகள் வலுவான தாக்கத்தை உருவாக்கும் அள வுக்கு காட்டப்படுகின்றன. சாதி, மதப் பிரிவினைகள், அதனால் ஏற்ப டும் சச்சரவுகள், சண்டைகள் முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டியவை. சகோதரச் சிந் தனை எல்லா இடங்களிலும் எல்லோர் மனங்க ளிலும் விதைக்கப்பட வேண்டியவை என்றார். மாநிலமெங்குமிருந்து வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இக் கூட்டத்தில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பேர வையின் துணைத்தலைவர் பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் என்.பழனிசாமி நன்றி கூறினார்.