கோவை, ஏப்.7- கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி உட்பட மூன்று பேர் யோகாவில் கின்னஸ் உட்பட பல்வேறு சாதனைகள் செய்து அசத்தியுள்ளனர். கோவை, சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ரூபிகா தனது பிள்ளைகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தி யோகா பயிற்சி யில் ஈடுபட வைத்து கின்னஸ் சாதனைக்கு அழைத்து சென் றுள்ளார். இதுகுறித்து ரூபிகா கூறுகையில், 9 ஆம் வகுப்பு படித்து வரும் பவ்ய ஸ்ரீ, தனது குழந்தை பருவம் முதலே யோகாவை கற்று, யோகா கலையில் எட்டு கோண வடிவில் தொடர்ந்து 2 நிமிடம் 6 வினாடிகளில் இருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதேபோன்று ஒன்பது வயது பூவேஷ், மற் றும் சர்வஜித் நாராயணன் ஆகியோர் தனது அக்காவை போலவே யோகாவில் தொடர்ந்து பல சாதனைகளை செய்து அசத்தியுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் விருதுகளை வாங்கி, வீடு முழுவ தும் கோப்பைகள், விருதுகள், சான்றிதழ்கள் என குவித்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர். தொடர் சாதனை களுக்காக மூன்று பேருக்கும், அண்மையில் மதுரை முத்தமிழ் சங்கத்தின் இளம் சாதனையாளர் விருது வழங்கி கெளர விக்கப்பட்டது குறிப்பிடதக்கது.