திருப்பூர், டிச.23 - திருப்பூர் நீதிமன்றத்தில் திங்களன்று துப்பாக்கி ஏந் திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர். பாளையங்கோட் டையை அடுத்த கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (25). என்பவர் குற்ற வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட நீதி மன்றத்தில் வெள்ளியன்று சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் மாயாண்டியை சுற்றி வளைத்து வெட் டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காவல் உதவி ஆய்வாளர், காவலர் ஒருவர் என துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட வேண்டும் என உத்தரவு பிறப் பித்தார். அதன்படி திருப்பூர் நீதிமன்றத்தில் காவ லர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந் தனர். கைத்துப்பாக்கியுடன் துணை ஆய்வா ளர் ஒருவர், நீண்ட ரேஞ்ச் துப்பாக்கி உடன் ஒரு காவலர் உள்பட மொத்தம் மூன்று காவ லர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர். திங்களன்று நீதிமன்றம் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.