districts

img

மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ. 9- மருந்து மற்றும் மருத்துவ உப கரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வலியுறுத்தி தமிழ் நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஈரோடு சூரம்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய மோடி அரசின் ஆட்சியில்,  இந்திய நாட்டு மக்கள் கல்வி தொடங்கி,  மருத்துவம், விவசாயம், சுற்றுச்சூழல், மொழி, திரைப்படம், கலாச்சாரம் என  அனைத்து விஷயங்களிலும் பெரும்  துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.  44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4  சட்டத் தொகுப்புகளாகத் திருத்திய மைத்து, குறைந்தபட்ச ஊதியம்,பணிப் பாதுகாப்பு, 8 மணி நேர வேலை என  அனைத்து உரிமைகளையும் தொழி லாளர்களிடமிருந்து பறிக்க முயல் கிறது. மேலும், ஆன்லைன் மூலமாக உயிர்காக்கும் மருந்துகளின் விற்ப னையை முழுவதும் நடைமுறைப் படுத்தி மொத்த மற்றும் சில்லரை மருந்து  வியாபாரிகளின் வாழ்வைச் சீரழிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத, தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும் ஆன்லைன் மருந்து விற்பனையை  தடை செய்ய வேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை முழுவதும் நீக்க வேண்டும்.  அத்தியாவசிய, உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைத் திட வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தியமைப்பதைக் கைவிட வேண்டும். முறையற்ற மருந்து  வியாபாரம் செய்யும் மருந்து நிறுவ னங்களின் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தி நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் வி.சுரேஷ்பாபு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், சங்க செயலாளர் சங்கரன் மற்றும் மாநில துணை தலைவர் நாராயணசாமி, மாநிலக் குழு  உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ரகுராமன், பி. சுந்தரராஜன், வி.பாண்டியன், கனக ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.