districts

img

எல்ஐசி பிரிமியத்திற்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்

நாமக்கல், அக்.9- எல்ஐசி பிரிமியத்திற்கு ஜிஎஸ்டி வரி விதிக் ககூடாது என காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட 33 ஆவது ஆண்டு  மாநாடு, நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் நடைபெற்றது. சனியன்று பேரணி மற்றும் பொது மாநாடு நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாள் ஞாயிறன்று பிரதிநிதிகள் மாநாடு மற்றும் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சேலம் கோட்டத் தலைவர் நரசிம்மன் தலை மையில் நடைபெற்றது. மாநாட்டை பொதுச் செயலாளர் செந்தில்குமார் துவக்கி வைத்து பேசினார். இதில், எல்ஐசி பாலிசிதாரர்களையும் எல்ஐசி நிறுவனத்தை பாதிக்கின்ற இன்சூ ரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். எல்ஐசி பிரிமியத் திற்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். பாலிசிதாரர்களுக்கு சிறப்பான சேவையை உறுதி செய்திட எல்ஐசி நிறுவனத்தில் காலி யாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண் டும். பாலிசிதாரர்களுக்கு வழங்கும் பாலிசிக் கான போனஸ் தொகையை உயர்த்தி தர வேண்டும்.  விலைவாசி உயர்வை கட்டுப் படுத்திட வேண்டும். பெட்ரோல், டீசல் சிலிண் டர் விலையை குறைக்க வேண்டும். பெண் களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். 2010க்கு பிறகு பணியில் சேர்ந் துள்ள எல்ஐசி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு இம்மாநாட்டில், காப்பீட்டு ஊழியர் சங்க  சேலம் கோட்டத் தலைவராக ஆர்.நரசிம்மன், துணைத்தலைவர்களாக ஆர்.தர்மலிங்கம், ஏ.மாதேஸ்வரன், வி.ஹரினி ஆகியோரும், பொதுச்செயலாளராக ஆர்.ஆனந்த், இணைச் செயலாளர்களாக ஏ.கலியபெருமாள், எம்.கணேச பாண்டியன், பி.சந்திர மெளலி, பொரு ளாளராக ஏ.ஞானவேலன், உதவிப் பொருளா ளராக ஆர்.அரவிந்தன் உள்ளிட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர்.