districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஏற்காட்டில் தண்ணீர் பஞ்சம்

சேலம், ஏப். 29- சேலம் மாவட்டம் ஏற்காடு மலை கிராமமக்கள் குடிநீர் தேடி வனப்பகுதிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஏற்காட்டில் கடந்த நான்கு மாதங்களாக போதிய மழை  இல்லாததால் மலை கிராமங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள் ளது. அங்குள் மக்கள் குடிநீர் தேவைக்கே பெரும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். ஏற்காடு பட்டிபாடி மலை கிராமத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஊராட்சி நிர்வாகம் வெட்டிய இரண்டு கிண றுகள் உள்ளன. அந்த கிணற்றில் பயன்பாட்டிற்க்கு தண்ணீர்  இருந்தும் தூர்வாரி தூய்மை படுத்தாததால் தண்ணீர் பயன்ப டுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில்  உள்ள வனப்பகுதியில் பொது மக்கள் குடி நீர் தேவைக் காக வனப்பகுதியில் உள்ள குட்டையில் நீண்ட நேரம் காத்தி ருந்து குடி நீர் எடுத்து வருகின்றனர்.  இப்பகுதி மக்களின் நிலையை கணக்கில் கொண்டு, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக கிணற்றை தூர் வாரி, குடிநீர்  பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர். முன்னதாக, மலை கிராம மக்கள் தண்ணீருக்காக வனப்பகுதியில் உள்ள குட்டையில், தண்ணீர்  ஊறும்வரை காத்திருந்து தண்ணீர் எடுத்து வரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

குடிநீர் கேட்டு சாலை மறியல்

பொள்ளாச்சி, ஏப்.29 பொள்ளாச்சி அருகே உள்ள சுந்தர கவுண்டனூர் பகுதி யில் சரிவர குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில்  ஈடுபட்டனர்.        பொள்ளாச்சி அருகே உள்ள சுந்தரகவுண்டணூர்,  ஏரிப்பட்டி, பெரிய கவுண்டனூர், பூசாரிபட்டி பகுதிகளுக்கு  ஆழியார் அணையிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. தற்போது கடும் வெயில் தாக்கத்தினால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், சுந்தர கவுண்டனூர் மற்றும் சுற்றுவட்டார  கிராமப் பகுதிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர்  சரிவர வருவதில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென பொள்ளாச்சி தாராபுரம் சாலை யில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பொள்ளாச்சி துணை கண்காணிப் பாளர் ஜெயச்சந்திரன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரி வித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தர வாதம் அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்ற னர்.

கொடநாடு வழக்கு – ஜூன் 21க்கு ஒத்திவைப்பு

உதகை, ஏப். 29- உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசா ரணை ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.  நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் டில் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம்  24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது.  இதில், கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பக தூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது. தமிழ கத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கொட நாடு வழக்கு விசாரணை மீண்டும் தீவிரம டைந்து உள்ளது.   இந்நிலையில், திங்களன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்னிலை யில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு  விசாரணைக்கு வந்ததது. வழக்கு விசார ணைக்காக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் விசாரணை  அதிகாரியான சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருக வேல் மற்றும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜ ராகினர்.  இதில், குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில்  வாளையார் மனோஜ் மட்டும் ஆஜராகி னார். வழக்கு விசாரணையின் போது நீதிமன் றத்தில் குற்றம் நடைபெற்ற  இடம் தொடர்பாக  இரண்டு மனுக்கள் நிலுவையில் உள்ளது குறித்து நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி வழக்கை எதிர்  வரும் ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முயல் வேட்டை – ரூ.1 லட்சம்  அபராதம்

பொள்ளாச்சி, ஏப்.29- பொள்ளாச்சி வனச்சரகத்தில் முயல்களை வேட்டைய 10 நபர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பொள்ளாச்சி வனப்பகுதியில் அடிக்கடி முயல் வேட்டை  நடப்பதாக, வனச்சரக அலுவலருக்கு கிடைத்த ரகசிய  தகவலின் அடிப்படையில், ஞாயிறன்று வனத்னதுறையினர், பொள்ளாச்சி தாலுகா கள்ளிப்பட்டி மற்றும் கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் சிறப்பு ரோந்து பணி மேற்கொண்டனர்.  அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 10 பேர் காட்டு  முயல்களை வயல் வெளியில் வேட்டையாடிக் கொண்டிருந்த னர். அவர்களை, பிடித்து விசாரணை மேற்கொண்ட வனத் துறையினர், வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் படி,  தலா ரூ. 10,000 என 10 நபர்களுக்கு மொத்தம் ரூ.1லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டது.

தரமற்ற முறையில் போடப்பட்ட சாலை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அவிநாசி, ஏப்.29- தெக்கலூரில் 8 மாதங்களுக்கு முன்  ஊராட்சி நிர்வாகத்தினர் போட்ட கான்கிரீட்  சாலை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ள தாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவிநாசி ஒன்றியம், தெக்கலூர் ஊராட்சிக்குட்பட்ட சேரன் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள் ளன. இப்பகுதியில் ஊராட்சி பொது நிதியிலி ருந்து விபிஜிஎப் திட்டத்தின் கீழ் 2022-23  வருடத்தில் கான்கிரீட் சாலை அமைப்பதற் காக நிதி ஒதுக்கப்பட்டு, ஆர்எஸ்ஆர் கன்ஸ்ட் ரக்சன் சுகுமார் என்பவருக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி யில் 8 மாதங்களுக்கு முன்பு கான்கிரீட் சாலை  அமைக்கப்பட்டது. தற்போது இச்சாலை பல  இடங்களில் பழுதடைந்து காணப்படுகிறது. அதேபோல, சாக்கடை கால்வாய் அமைக் காததால் கழிவு நீர் வெளியே செல்ல முடியா மல் தேங்கிநிற்கிறது. இதனால் நோய்  தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள் ளது. அதேபோல, சென்னிமலைபாளையத் தில் ரூ.9.96 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கால் வாய் அமைக்கப்பட்டது. அப்போதே அப்பகு தியை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகள் சாக்கடை கால்வாயில் விழாமல் இருக்க  மூடி அமைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற  தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவரும் நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளார். ஆனால் சாக்கடை கால்வாய் மேலே மூடி அமைக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், தரமற்ற முறையில் கான்கிரீட் சாலை  அமைத்துக் கொடுத்த ஊராட்சி நிர்வாகத் தின் மீதும், ஒப்பந்ததாரர் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் சாக்கடை கால்வாய் அமைத்து தர  வேண்டும். மேலும் சாக்கடை கால்வாய்க்கு மூடி அமைக்க வேண்டும். தெக்கலூர் ஊராட் சியில் சில இடங்களில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. அதையும் சரி செய்து தர வேண் டும் என தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு இயந்திர இருப்பு அறை ஆய்வு!

பொள்ளாச்சி, ஏப்.29- பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான  வாக்குப்பதிவு இயந்திரங்கள் நா.மகாலிங்கம் பாலிடெக் னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள பூட்டப்பட்ட அறையில்  வைக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு டன், சிசிடிவி பதிவோடு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு குறித்து, கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார். சமீபத்தில், இருவேறு பகுதிகளில் சிசிடிவி பழு தானதை தொடர்ந்து, பொள்ளாச்சியில் இந்த ஆய்வு நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின் போது, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய்  அலுவலருமான ஷர்மிளா மற்றும் உதவி அலுவலரும், மாவட்ட சார் ஆட்சியருமான அ.கேத்தரின் சரண்யா, பொள் ளாச்சி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச் சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சாலை விபத்தில் தாய், மகன் பலி
 

சாலை விபத்தில் தாய், மகன் பலி சேலம், ஏப்.29- சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலைய குடியி ருப்பைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். மேட்டூர் அனல் மின் நிலை யத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி தமிழரசி (53), மேட்டூர் அனல் மின் நிலை யத்தில் தொழிலாளர் நல அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகன் புகழ் ஒளி (22), பொறியியல் பட்டப்படிப்பு  இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், ஞாயிறன்று இரவு தமிழரசியின் உறவினரை மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்க தமிழரசியும், அவரது மகன் புகழ் ஒளியும்  காரில் அழைத்துச் சென்றனர். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தப் பிறகு நள்ளிரவில் சேலத் திலிருந்து மேட்டூர் நோக்கி புறப்பட்டனர். மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி நான்கு ரோட்டில், திங்களன்று அதி காலை நிலை தடுமாறிய கார், சாலையோரமிருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இவ்விபத்தில் சம்பவ இடத்தி லேயே தமிழரசி உயிரிழந்தார். இதையடுத்து அருகில் இருந்த வர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேட்டூர் அரசு மருத்துவமனையில் தமிழரசியை பரிசோ தித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து போனதாக தெரிவித்த னர். புகழ் ஒளி முதலுதவி சிகிச்சைக்குப்பிறகு மேல் சிகிச்சைக் காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து மீண்டும் அவரது சடலம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகை கொள்ளை

நகை கொள்ளை கோவை, ஏப்.29- கோவை மாவட்டம், பொள் ளாச்சி அடுத்துள்ள சேரன் நகர் பகுதியில் உள்ள உமா மகேஸ்வரி காலனியில் வசித்து வருபவர் பாலாஜி (46). இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், ஞாயிறு  விடுமுறை என்பதால், உடு மலை சாலையில் உள்ள அவ ரது உறவினர் வீட்டிற்கு சென் றுள்ளனர். இந்நிலையில், பாலாஜியின் வீட்டின் கதவு முன் பக்கம் உடைந்துள் ளதை, அருகில் உள்ள வீட் டார் பார்த்து, பாலாஜிக்கு தக வல் அளித்துள்ளனர். அதன் பேரில் பாலாஜி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின்  கதவை உடைத்து நகை களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த அவர், மகாலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயவி யல் நிபுணர்கள், கோவையி லிருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் உதவியுடன் திருட்டில் ஈடுபட்டவரை தேடி  வருகின்றனர். மேலும், அவ ரது வீட்டில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்பு கேமரா வில் பதிவான பதிவுகளை வைத்தும் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். திரு டுப்போன நகை சுமார் 30 லிருந்து 50 பவுன் இருக்க லாம் என தெரியவந்துள்ளது.

வணிகத் தொழிலுக்கு இடையூறாக உள்ள ஜிஎஸ்டி!

நாமக்கல், ஏப்.29- வணிகத் தொழிலுக்கு இடையூறாக உள்ள ஜிஎஸ்டி வரி சார்ந்த பிரச்சனை  குறித்து ஒன்றிய அரசிடம் மனு அளிக்க  உள்ளதாக பழைய இரும்பு வியாபாரி கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பழைய இரும்பு வியா பாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட் டம் நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு சாந்தி மஹாலில், சங்கத்தின் மாநி லத் தலைவர் பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஃபாருக் வரவேற்றார். சிறப்பு அழைப் பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஜெயகுமார் வெள் ளையன், புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொ டர்ந்து பேசிய அவர், மே 5 ஆம் தேதி  வணிகர் தினத்தன்று மதுரையில் நடை பெறவிருக்கும் 41 ஆவது வணிகர் விடு தலை முழக்க மாநாட்டில் அனைத்து வணிகர்களும் கடைகளுக்கு முழு விடு முறை அளித்து, குடும்பத்துடன் மாநாட் டில் கலந்துகொள்ள வேண்டும் என  வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டத் தில், மாவட்டம் வாரியாக பொறுப்பாளர் களை நியமனம் செய்வது, அடுத்த கூட் டத்தினை திண்டுக்கல் நகரில் நடத்து வது, வணிகத் தொழிலுக்கு இடையூ றாக இருக்கும் ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஒன்றிய, மாநில அரசுகளிடம் மனு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பின் ஈரோடு மாவட்டத் தலைவர் சண்முகவேல், தகவல் தொழில் நுட்பணி மாவட்ட பொறுப்பாளர் பால கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் பொன்.வீரக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், மாநிலப் பொருளாளர் சிவசண்முகராஜன் நன்றி  கூறினார்.

மதுபானக்கடை ஊழியர் மீது அதிமுக நிர்வாகி தாக்குதல்

நாமக்கல், ஏப்.29- குமாரபாளையத்தில் அரசு மதுபா னக்கடை ஊழியரை தாக்கிய அதிமுக  நகரச் செயலாளர் மீது புகாரளிக்கப் பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், அரசு மேல்நி லைப்பள்ளி சாலை, விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (40). இவர் ஆனங்கூர் பிரிவு பகுதியிலுள்ள அரசு மதுபானக்கடையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஞாயிறன்று இரவு 11 மணியளவில் தனது பணியை முடித்து வீட்டிற்கு, தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது குமாரபாளையம் நகர அதி முக செயலாளர் பாலசுப்ரமணி, அவரது வாகனத்தை வழிமறித்து, தகாத வார்த்தை பேசி, கன்னத்தில் அறைந்து, வாகனத்தின் சாவியை பிடுங்கிக்கொண் டார். தொடர்ந்து அருண்குமாரை கீழே  தள்ளி, கல்லால் அடித்ததில், தலையில் காயம் ஏற்பட்டு, வலி தாங்காமல் சத் தம் போட்டுள்ளார். இதையடுத்து அக் கம் பக்கத்தினர் விரைந்து வந்து காய மடைந்த அருண்குமாரை மீட்டு, குமார பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதைத்தொ டர்ந்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் துறை யினர் அதிமுக நகரச் செயலாளர் பால சுப்ரமணி மீது வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.