districts

img

மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலக்கடலை விவசாயிகள்!

திருப்பூர், ஜூலை 14- மழைக்காலம் தொடங்க உள்ள  நிலையில் வானம் பார்த்த பூமியில்  விவசாயம் செய்யும் விவசாயிகள் மழையை எதிர்நோக்கி விளைநிலங் களை தயார் செய்து வருகின்றனர். நீர் பாசன வசதி இல்லாத நிலங்கள்  வானம் பார்த்த பூமி என்று அழைக்கப் படுகிறது. இப்பகுதிகளை சேர்ந்த விவ சாயிகள் மழைக் காலங்களில் நிலக் கடலை போன்ற சிறு தானிய வகை களை பயிர் செய்து மழையை நம்பி சாகு படி செய்வார்கள்.  இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், பட்டம் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி முனி யப்பன் கூறுகையில், நான் நீர்ப்பாசன வசதி இல்லாததால் வானம் பார்த்து வெள்ளாமை செய்து வருகிறேன். இப் பொழுது இரண்டு ஏக்கருக்கு நிலக் கடலை விதைத்துள்ளேன். இரண்டு ஏக் கருக்கு 80 படி பருப்பு தேவைப்படும். அதாவது ஒரு படி ஒன்னேகால் கிலோ  வரும். முதலில் ஏர் ஓட்டி, களை வெட்டி,  பருப்பை விதைப்போம். செடியில் பூ  வைக்கும் நேரத்தில் இன்னொரு முறை  களை வெட்டுவோம். நல்ல மழை பெய் தால் வெள்ளாமை சிறப்பாக இருக் கும். இது 90 நாள் பயிர் என்பதால் பரா மரிப்பு மிக முக்கியம். நல்ல மழை பெய் தால் இரண்டு ஏக்கருக்கு 70 மூட்டை கடலை கிடைக்கும். கிட்டத்தட்ட 4900 கிலோ நிலக்கடலை கிடைக்கும். மூன்று  நாட்கள் நிலக்கடலையை காய வைத் தால் 900 கிலோ குறைந்து நான்காயி ரம் கிலோ காய்ந்த நிலக்கடலை கிடைக் கும். சென்ற முறை பயிரிட்ட பொழுது  கிலோவுக்கு 88 ரூபாய்க்கு என்னிடமி ருந்து கொள்முதல் செய்தனர்.

மேலும் இதற்கான செலவுகள் குறித்து கேட்டபொழுது, உழவு ஓட்டுவ தற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் டிராக்டர் வாடகை கொடுக்க வேண்டும்.  முதல் முறைக்கு ரூ.12 ஆயிரம், இரண் டாம் முறைக்கு ரூ.3ஆயிரம் ஆகும். களை வெட்டுவதற்கு ஒரு ஏக்கருக்கு 20  ஆட்கள் தேவைப்படுவார்கள் அவர்க ளுக்கு கூலி ஏறத்தாழ ரூ.16 ஆயிரம்  ஆகும். பயிரிடும் பருப்பு பெரும்பாலும்  அறுவடை செய்த உடன் எடுத்து வைப் பார்கள். அப்படி இல்லாதபட்சத்திற்கு கடையில் ஒரு படி ரூ.100 முதல் 110  வரை செலவு செய்து வாங்க வேண்டிவ ரும். மொத்தத்தில் இரண்டு ஏக்கருக்கு  ரூ.50 ஆயிரம் செலவாகும். இத்தனை  செலவு செய்து மழை பெய்தால் சாகுபடி  கிடைக்கும். வருமானமும் நன்றாக இருக்கும். மழை பெய்யாவிட்டால் செலவு செய்த தொகையும், ஒட்டு மொத்த உழைப்பும் வீணாகிவிடும்.  சில இடங்களில் நல்ல விளைச்சல் கிடைத்தாலும், போதுமான கொள் முதல் நிலையங்கள் இல்லாததால், தர கர்களை நம்ப வேண்டிய சூழல் இருக் கும். அவர்கள் ஒரு கிலோவுக்கு இருபது  ரூபாய் கமிஷன் எடுப்பதால் பெரிய லாபம் ஒன்றும் கிடைக்காது. அரசு  போதுமான கொள்முதல் நிலையங் களை அனைத்து கிராமப்பகுதிகளிலும் கொண்டு செல்ல வேண்டும். இல்லா விட்டால் அதற்கேற்ற நபர்களை நிய மித்து கிராமங்களில் கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்தால் விவசாயி களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மீண் டும் விவசாயத்தில் ஈடுபட அது பெரும்  உதவியாக இருக்கும் என்று தெரிவித் தார். இதுகுறித்து சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திர மோகன் கூறுகையில், கோவை உட் கோட்டத்தில், சேவூர் விற்பனை கூடத் தில்தான் முதல் முறையாக நிலக் கடலை கொள்முதல் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டது. வாரத்தில் ஒரு முறை மறைமுக ஏலம் நடத்தப்ப டும். விவசாயிகளுக்கு ஏதுவாக பல  வியாபாரிகளை ஒரே இடத்தில் சந் தித்து, வியாபாரம் செய்வதற்கான இட மாகத்தான் விற்பனை கூடங்கள் உரு வாக்கப்பட்டது. அந்த வகையில்தான் செயல்பட்டு வருகிறது. சேவூர் ஒழுங்கு முறை விற்பனை நிலையத்தை பொருத்தவரை குன்னத் தூர், நம்பியூர், புளியம்பட்டி உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவ சாயிகளும், வியாபாரிகளும் வருகிறாr கள். இவர்கள் தேவையான சேமிப்பு  கூடங்கள், நிலக்கடலையை காய வைப் பதற்கான வசதிகள் அனைத்தும் இங்கு  உள்ளன. மேலும் ஒழுங்குமுறை விற் பனை கூடங்களுக்கு தங்களது பயிர் களை கொண்டு வர முடியாத விசாயி களின் கிரமங்களுக்கு நேரடியாக  சென்று ஆன்லைன் மூலம் வியாபாரி களை சந்திக்க வைப்பதற்கான ஏற் பாடுகளும் உள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகிகளுடன் தொடர்பில் உள்ள விவசாயிகள் இடை தரகர்களிடம் செல்வதில்லை என்று தெரிவித்தார். 

 (ந.நி.)