districts

img

மாதந்தோறும் மூன்றாவது வாரம் திருப்பூர் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: சார் ஆட்சியர் ஒப்புதல்

திருப்பூர், அக். 27 - திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயி கள் குறை தீர்ப்பு கூட்டத்தை மாதந்தோறும்  மூன்றாவது வாரத்தில் நடத்துவதற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கையை சார் ஆட்சியர் ஏற்றுக் கொண் டார். திருப்பூர் வருவாய் கோட்ட சார் ஆட்சியர்  அலுவலகத்தில், விவசாயிகளுக்கான குறை தீர் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. திருப்பூர்  சார் ஆட்சி யர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை யில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருப்பூர்  தெற்கு, திருப்பூர் வடக்கு, ஊத்துக்குளி, அவி நாசி, பல்லடம் வட்டாட்சியர்கள் மற்றும் ஒரு  சில அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர் குமார் இக்கூட்டத்தில் பேசும்  போது, ஒவ்வொரு மாதமும் நான்காவது வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப் படுகிறது.

இந்த மாதத்திற்கான கூட்டம் வரும்  சனிக்கிழமை நடக்க இருக்கிறது. அதற்கு ஒரு  சில நாட்கள் முன்னதாக கோட்ட அளவிலான  விவசாயிகள் கூட்டத்தை நடத்துவதால் உரிய  தீர்வு கிடைக்காது. எனவே கோட்ட அளவி லான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ஒவ் வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் நடத் துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்  மூலமே அந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரி விக்கும் கோரிக்கைகள், புகார்கள் மீது நட வடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் இருக் கும். அதில் தீர்வு கிடைக்காத பட்சத்தில் நான் காவது வாரத்தில் நடத்தப்படும் மாவட்ட ஆட் சியர் அலுவலக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மேல்முறையீடு செய்து தீர்வு  காண முடியும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.  இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சார்  ஆட்சியர், கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாதந்தோறும் மூன்றா வது வாரம் நடத்துவதற்கு உறுதியளித்தார்.

தெருநாய்கள் தொல்லை:

இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவர் எஸ்.அப்புசாமி அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது: திருப்பூர் ஒன்றியத்தில்  பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம் பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்கு பதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஆகிய  10 ஊராட்சிகளிலும் தெரு நாய்கள் நாளுக்கு,  நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நாய்கள்  ஆடு, மாடு, கோழிகளையும், மனிதர்களை யும் கடித்து பொருளாதார இழப்பை ஏற்படுத் துகின்றன.  இது தொடர்பாக பல முறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சனைக்கு நகராட்சியை அணுகி தீர்வு காணுமாறு ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் கருத்துத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டு வரும் பகுதிகள் ஊராட்சி பகுதிகளாகும், நகராட்சிக்கு உட்பட்டவை அல்ல. எனவே அந்தந்த பகுதி கால்நடை மருத்துவர்கள் மூலம், தெரு நாய்களுக்கு தகுந்த கருத் தடை சிகிச்சை அளித்து நாய்கள் வளர்ச்சி யைக்  கட்டுப்படுத்த வேண்டும் என விவசா யிகள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், பெருமாநல்லூர் உதவி மின்  பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட  கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பா ளையம் ஊஞ்சக்காடு அருகில் உள்ள மின் மாற்றியில் இருந்து பொங்குபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த தட்டாங்காடு மின் இணைப்புகளுக்கு தாழ்வழுத்த மின்சாரம் வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஐந்து மின் கம்பங்கள் மிகவும் பழுதாகி விபத்து ஏற்படும் நிலையில் உள்ளன. இந்த மின்  கம்பங்களை மாற்றி அமைத்துத் தரும்படியும்  விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள் ளது. இக்கூட்டத்தில் பெற்றுக் கொண்ட மனுக் களின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுப் பதற்கும் ஆவண செய்வதாக சார் ஆட்சி யர் தெரிவித்தார்.  இதில், வனத்துறை மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட உயர் அதிகாரிகள் மட்டும் முதன்மை அதிகாரிகள் மட்டத்தில் கலந்து கொண்டனர். பிற அரசுத் துறையைச் சார்ந்த  வட்ட, கோட்ட அளவிலான மின்சாரத்துறை, வேளாண்மை துறை, மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை போன்ற முக்கியமான துறைகளில் இருந்து முதன்மை அதிகாரிகள்  கலந்து கொள்ளவில்லை.