தருமபுரி, ஜன.3- வனத்துறை அதிகாரிகளின் அலட் சிய போக்கால், பெயரளவில் நடைபெ றும் குறைதீர்க்கும் கூட்டமாக உள் ளது என விவசாயிகள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதம் ஒருமுறை மாவட்ட வன அலுவலகத்தில் நடக்கிறது. அதன் படி ஜனவரி மாதத்திற்கான கூட்டம், தருமபுரி மாவட்ட வன அலுவலத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட் டம், மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு இல்லாததால், ரேஞ்ஜர் முருகே சன் தலைமையில் நடைபெற்றது. இதில், உதவி வன பாதுகாவலர்கள் வின்சென்ட், சரவணன் மற்றும் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் குறை வான விவசாயிகளே கலந்து கொண்ட னர். இக்கூட்டம் முற்பகல் 11 மணிக்கு தொடங்குவதாக அறிவித்தனர். ஆனால், 3 மணி நேரம் விவசாயிகளை காக்க வைத்து, அதன்பிறகு, கூட்டத்தை வனத்துறை அதிகாரிகள் நடத்தினர். இதனால், ஆவேசமடைந்த விவசாயி கள் வனத்துறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், வனப்பகுதியை ஒட்டி யுள்ள விவசாய நிலங்களில் மயில், காட்டுப்பன்றி, குரங்கு, யானை உள்ளிட் டவை விவசாய பயிர்களை சேதம் செய்வதால், அவற்றை விரட்டும் கருவி கள் குறித்து காட்சிப்படுத்தபட்டது. இதில், சத்தியமங்கலம் பண்ணாரி யம்மன் கல்லூரியின் பேராசிரியர்கள் ராம்குமார், அருள்முருகன் கலந்து கொண்டு, வனவிலங்குகளை விரட் டும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து, விளக்கம் அளித்தனர். மேலும், 3 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.5,500 வரை யுள்ள கருவிகளை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி வனவிலங்குகளை எளி தில் விரட்டலாம் என தெரிவித்தனர். விவ சாயத்தில் லாபம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து எப்படி கருவிகளை வாங்குவது? இவற்றை, அரசு மானிய விலையில் கொடுத்தால் பயன்படுத் தலாம், எதுவும் இல்லாமல் எப்படி வாங் குவது? என விவசாயிகள் புலம்பினர். மேலும், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்சேதத்திற்ககு உரிய இழப்பீடு கேட்டு மனு கொடுத்தும் எந்த நடவ டிக்கையும் இல்லை. அதேசமயம், மாவட்ட வனத்துறை யால் நடத்தப்படும் குறைதீர்க்கும் கூட் டம் நடப்பது விவசாயிகளுக்கு தெரிவிப் பதில்லை. எனவே, விவசாயிகளுக்கு தெரியும் வகையில் வனத்துறையினர் விவசாயிகளிடையே இதுகுறித்து துண்டு பிரசுரம் விநியோகிக்க வேண் டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.