கோபிசெட்டிபாளையம், அக்.3- கொங்கர்பாளையம் ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்திலிருந்து வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் ஒன் றித்திற்குட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட் சியில் திங்களன்று, ஊராட்சி மன்ற தலை வர் ஜானகி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செய லர் செல்வம், வரவு - செலவு கணக்கு குறித்து பேசினார். அப்போது பொதுமக்கள், ஊராட்சி யில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து விவாதத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து 7 ஆவது வார்டு உறுப்பினர் இளங்கோ பேசுகையில், ஊராட்சி பகுதியில் பழுதடைந்து இயங்காத நிலையில் உள்ள மின் மோட்டார்களுக்கு மின்கட்டணம் செலுத்தியாதகவும், உதிரி பாகங்கள் வாங்கப்பட்டு பழுதுநீக்கியதாக ஊராட்சி செயலர் கணக்கு எழுதியுள்ளார் என குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்து ஊராட்சி தலைவர் ஜானகி பேசுகையில், ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக 20க்கும் மேற் பட்ட பணியாளர்கள் உள்ளனர். அவர்க ளுக்கு சம்பளம் வழங்குவதற்காக பழுத டைந்த மின் மோட்டார்களுக்கு உதிரிபாகங் கள் வாங்கியதாகவும், மேல்நிலை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதாகவும் கணக் கெழுதி அப்பணத்தை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம் என தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவரின் இந்த பகிரங்க வாக்குமூலத்தை கிராமசபைக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளும், காவல் துறையினரும் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், ஊராட்சி செயலர், கிராமசபை யில் சமர்ப்பிக்க வேண்டிய ஊராட்சியின் வரவு - செலவு கணக்கு கோப்பு புத்தகங்களை பொதுமக்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கா ததால் கூட்டத்தை புறக்கனிப்பதாக கூறி வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த னர். மேலும், ஊராட்சியின் வரவு - செலவு கணக்கு விவரங்களை கூட்டத்தில் பொது மக்கள் முன்னிலையில் விவாதிக்க மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் கூட்டத் தில் சுமார் ஒருமணி நேரம் வாக்குவாதம் நடை பெற்றதால், கூட்டம் பாதியில் முடிந்தது.